மீண்டும் பினிஷிங் கிங் என்பதை நிரூபித்த தல தோனி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் – தொடரை கைப்பற்றியது

ms
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் போட்டியில் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த 50 ஓவர்களில் 230 ரன்களை குவித்தது.

chahal

231 இலக்கினை எதிர்த்து விளையாட துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் பொறுமையாக விளையாட துவங்கினர். ஆனால், அவர்களால் நிலைத்து நின்று துவங்கினர். முடியாமல் ரோஹித் 9 ரன்னிலும் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர். கோலி மற்றும் தோனி ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 54 ரன்களை குவித்தது.

- Advertisement -

பிறகு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. தோனி ஆட்டமிழக்காமல் 87 ரன்களுடனும் ஜாதவ் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 61ரன்களை குவித்தார். இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்து இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை அடைய வைத்தது.

dhoni

தொடரின் முதல் போட்டியில் பொறுமையாக ஆடிய தோனியை விமர்சித்தவர்களுக்கு கடந்த இரண்டு போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். ஏற்கனவே, டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அதிர்ஷ்டத்தால் அவுட்டிலிருந்து தப்பிய தோனி . அப்பீல் செய்யாத ஆஸி வீரர்கள் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -