இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை குவித்தது.
அடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் இந்த ஆட்டமும் சோபிக்க தவறினர். இந்திய அணி 11 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. தவான் 1 ரன்னில் வெளியேறினார். பிறகு, ரோஹித் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
அப்போது மைதானம் முழுவதும் தோனி, தோனி என்று ரசிகர்கள் கூச்சலிட துவங்கினர். அதற்கு காரணம், ராஞ்சி தோனியின் சொந்த ஊராகும். வெளிநாட்டு மைதானங்களிலேயே தோனிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறும் போட்டிக்கு எவ்வளவு ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை. முதல் இரு விக்கெட் அடுத்தடுத்து விழுந்ததும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த இடத்தில் இறங்கிய ராயுடு வெறும் 2 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
When the 'Lion' walks out to bat in his den ??#INDvAUS pic.twitter.com/WKRKGpKgaB
— BCCI (@BCCI) March 8, 2019
அதன் பிறகு, ரசிகர்களின் ஆரவாரத்தோடு தோனி தனது சொந்த ஊரில் கடைசி போட்டியில் விளையாடி வருகிறார். இதனால் மைதானம் முழுவதும் தோனியின் ரசிகர்கள் நிரம்பி உள்ளனர்.
இதையும் படிக்கலாமே :
MS Dhoni : நம்ப முடியாத வகையில் மெக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்து வெளியேற்றிய தல தோனி – வைரல் வீடியோ
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்