இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து நாளை ராஞ்சி நகரில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று விமானம் மூலம் நாக்பூர் நகரிலிருந்து ராஞ்சி வந்தடைந்தனர். ராஞ்சி நமது தல தோனியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தந்து ஊரில் கடைசியாக விளையாடப்போகும் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தார். விமானம் விட்டு இறங்கியதும் தோனி தனது ஹம்மர் காரில் சில வீரர்களை அழைத்து சென்றார். மீதமுள்ள வீரர்கள் அணி பேருந்து மூலம் விருந்து நடந்த இடத்திற்கு சென்றார்கள்.
இரவு நேரத்தில் நடத்தப்பட்ட அந்த விருந்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக கலந்து கொண்டது. மேலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்க்களமாக கேண்டில் லைட் டின்னரை ஏற்பாடு செய்து இருந்தார் தோனி. இந்த விருந்து முடிந்து அணி வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் :
Thank you for last night @msdhoni bhai and @SaakshiSRawat bhabhi ☺️?? pic.twitter.com/80BOroVvze
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 7, 2019
இந்த புகைப்படத்தையு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் பதிவிட்டார். அதில் நேற்றைய இரவுக்கு நன்றி தோனி பாய் மற்றும் ஷாக்சி பாபி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே :
இந்த போட்டியில் என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடினேன் – விஜய் ஷங்கர்
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்