Cricket : தோனியை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டாம். அவருக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு அளிக்கலாம் – பதானி

Badani
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டி20 போட்டியால் கொண்ட தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. அன்று நடந்து முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி அந்த போட்டியில் குறைந்த ரன்கள் அடித்ததே அந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரமணமாக பார்க்கப்படுகிறது.

dhoni

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் மாலை 6.30 துவங்க உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்திய மண்ணில் இதுவரை இந்திய அணி தொடரை இதுவரை இழந்தது கிடையாது. தற்போது போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி பேட்டி ஒன்றினை அளித்தார்.

- Advertisement -

அதில் பதானி கூறியதாவது : இந்திய அணியில் பண்ட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதால் தொடரின் கடைசி போட்டியாகிய இந்த போட்டிக்கு தோனிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான விஜய் ஷங்கருக்கு வாய்ப்பினை அளிக்கலாம் என்று கூறியுள்ளார். விஜய் வளர்ந்து வரும் வீரர் எனவே அவருக்கு தேவையான வாய்ப்பினை வழங்க வேண்டும்.

vijay

மேலும், பேட்டிங் திறமை கொண்ட ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதால் அவரை சோதனை முறையிலாவது அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தோனி சமீபத்திய பேட்டிங் குறித்த சர்ச்சைக்காக இதை நான் கூறவில்லை. இளம் வீரருக்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களது திறமையை நிரூபிக்கமுடியும் என்பதால் இன்றைய போட்டியில் தோனிக்கு பதிலாக விஜய் ஷங்கரை இறக்க வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

IND vs AUS T20I : போட்டிநடைபெற இருக்கும் பெங்களூரு மைதானத்தின் தன்மை என்ன என்று தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -