கஷ்டங்கள் தீர சனிக்கிழமை பரிகாரம்

vinayagar sad man
- Advertisement -

வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்காத மனிதனை கிடையாது என்று சொல்லலாம். ஆனால் சிலருடைய வாழ்க்கையில் இது அளவு அதிகமாக இருக்கும். அவர்கள் போகும் இடமெல்லாம் துன்பம் அவர்களை தொடர்ந்து கொண்டே செல்லும். இப்படியான சூழ்நிலைக்கு கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி அவர்களின் கர்மவினையும் இன்னொரு காரணம். காரணம் எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் காலமெல்லாம் துன்பப்பட்டு கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக வாழ்வது. இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த நிலை மாறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கஷ்டங்கள் கிரக தோஷங்கள் கர்ம வினை தீர பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு இரண்டு பொருள் தேவை. ஒன்று தயிர் இது வீட்டிலேயே நாம் உறை ஊற்றியதாக இருந்தால் நல்லது. அது இல்லாது போனால் கடையில் வாங்கலாம். அடுத்தது கைப்பிடி அளவு உளுந்து. அத்துடன் தொன்னை வாங்கிக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலையில் சிறிய கிண்ணம் போல் செய்திருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு மேல் அந்த தொண்ணையில் சிறிதளவு தயிரை ஊற்றி கொள்ளுங்கள். அடுத்து கையில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து எடுத்து வைத்துக் கொண்டு உங்களுடைய துன்பங்கள் துயரங்கள் நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். இந்தப் பிரார்த்தனை தான் உங்களுடைய அனைத்து துன்பங்களையும் தீர்க்கும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த உளுந்தை தயிரில் போட்டு அப்படியே ஊற விட்டு விடுங்கள். மறுநாள் சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள்ளாக இந்த தயிரை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடியில் கொண்டு வைத்து விட்டு வந்து விடுங்கள். கோவிலில் இருக்கும் அரச மரம் விநாயகர் இருக்கும் அரச மரத்தை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தாதீர்கள்.

பகல் 12 மணிக்குள் வைக்க முடியாதவர்கள் மதியம் உச்சி வேலைக்கு பிறகு சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் வைத்து விடுங்கள். ஒரு வேளை உங்கள் வீட்டில் யாரேனும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டாலோ அல்லது துன்பப்படுபவர்கள் சிறு வயதில் உள்ளவர்கள் ஆக இருந்தாலும் அவர்களுக்கு பதிலாக இந்த பரிகாரத்தை வீட்டில் உள்ளவர்கள் செய்யலாம்.

- Advertisement -

இதை யார் செய்தாலும் அரச மரத்தடியில் வைத்து விட்டு திரும்பி வரும் போது வீட்டுக்குள் நேரடியாக வராமல் கை கால்களை அலம்பிய பிறகு தான் வர வேண்டும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர வேண்டும். அதிகமான துன்பத்தில் அவதிப்படுபவர்கள் அமாவாசை அன்றும் சேர்த்து செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது

அதே போல் வெள்ளிக்கிழமை இரவு இதை ஊற வைக்க முடியாதவர்கள் சனிக்கிழமையில் ஒரு மணி நேரம் இப்படி ஊற வைத்தால் கூட போதும். நம்முடைய துன்பங்கள் கிரக தோஷங்கள் கர்ம வினை வியாதி அனைத்தும் தீர எந்த ஒரு பரிகாரம் அற்புதமான பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது .நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -