பணம் சேர வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது

- Advertisement -

வைகுண்ட ஏகாதசி தினத்தின் சிறப்புகளையும் அதன் பலன்களையும் அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறை எனும் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித துன்பமும் நேராது என்பதுடன் அவர்களுடைய தலைமுறைக்கு வறுமை என்பது நேராது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அது மட்டும் இன்றி பணத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயாரை தன் மார்பிலே குடிகொள்ள செய்திருப்பவர் பெருமாள். அத்தகைய சக்தி வாய்ந்த பெருமாளை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணவரவு அதிகரிக்க வைகுண்ட ஏகாதசி என்று செய்ய வேண்டியது

நாளை வைகுண்ட ஏகாதசி அன்று காலை சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தை அனைவரும் கண்டு பெருமாளை அருளை பரிபூரணமாக பெற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்பாக மாறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

அதே போல் பணம் சேர செய்யப்படும் இந்த பரிகாரத்தை நாளைய தினத்தில். இரவு உறங்க செல்வதற்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் இரவு இதை செய்து விட்டு விரதத்தை தொடரலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு பச்சை நிறத்திலான சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் துளசி இலை சோனி இவை அனைத்தையும் தேவை.

- Advertisement -

துளசி இலைகளை நாளை செடியில் இருந்து பறிக்கக் கூடாது. ஆகையால் கோவிலில் கிடைத்தால் வாங்கி கொண்டு வந்து விடுங்கள் மிகவும் நல்லது முடியாத பட்சத்தில் கடையில் வாங்குங்கள். நாளை இந்த முடிச்சு தயார் செய்யும் நேரம் ராகு காலம், எமகண்டம் இல்லாமல் இருக்க வேண்டும் அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பச்சை நிற துணியில் பச்சை கற்பூரத்தையும் துளசியும், சோழி இவையெல்லாம் வைத்து முடிச்சாக பச்சை நிற நூறல் கட்டி விடுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை பெருமாளின் பாதத்தில் வைத்து மகாலட்சுமி தாயாரையும் மனதார வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

- Advertisement -

அந்த நேரத்தில் உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று இவர்களை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். எங்களிடம் வீட்டில் வைக்க பணமே இல்லை என்பவர்கள் கூட பத்து ரூபாயாவது பீரோவில் வைத்து அதன் மேல் எந்த முடிச்சை வைத்து பாருங்கள் பணம் நிச்சயம் சேரும்.

இந்த முடிச்சை அடுத்த வருடம் வைகுண்ட ஏகாதசி வரை அப்படியே இருக்க வேண்டும் மாற்றக் கூடாது.. அடுத்த வருடம் இதை மாற்றும் பொழுது சோழியை ஆலயத்தில் உள்ள உண்டியல் அல்லது நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். பச்சைக் கற்பூரம் கரைந்து விட்டிருக்கும். துளசியும் வாடி இருக்கும் இதை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.மீண்டும் இதே போல முடிச்சை செய்து பணப்பெட்டியில் வைத்து விடுங்கள்.

இந்த முடிச்சு இருக்கும் இடத்தில் பணத்தடை இருக்காது பண பிரச்சனை வராமல் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் உழைக்கும் உழைப்பிற்கும் முழு பலனை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற கிருஷ்ணர் வழிபாடு

இதன் மூலம் உங்கள் வருமானம் அதிகரித்து வீட்டில் பணம் வற்றாமல் பெருகிக் கொண்டே இருக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நாளைய நாள் தவறவிடாமல் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -