நாளை வளர்பிறை அஷ்டமி. பைரவருக்கு இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களும் பிறக்கும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

பைரவரை வழிபாடு செய்ய உகந்த திதி என்றால் அது அஷ்டமி திதி. அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு நமக்கு நிறைய நல்ல பலன்களை கொடுக்கும். தேய்பிறை அஷ்டமியில் கடன் தீர வேண்டும் என்று பைரவரை நம்பிக்கையோடு எந்த அளவிற்கு நாம் வழிபாடு செய்கிறோமோ, அதே அளவு நம்பிக்கையோடு வளர்பிறை அஷ்டமியில் ‘நம்முடைய வருமானம் பெருக வேண்டும். வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும். வாழ்நாள் முழுவதும் நம்முடைய குடும்பத்திற்கு தன தானியத்திற்க்கு பஞ்சம் வரக்கூடாது’ என்று வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான வேண்டுதலை வைத்தால் வளர்பிறை நிலவு போல நம் வாழ்வும் முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பது நம்பிக்கை. அந்த வரிசையில் நாளையதினம் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய அஷ்டமி வழிபாட்டை சுலபமான முறையில் எப்படி மேற்கொள்வது என்பதைப்பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வீட்டில் கால பைரவரை நினைத்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுடைய வீட்டின் அருகில் சிவாலயம் இருந்தால் அந்த கோவிலில் இருக்கும் பைரவர் சன்னிதானத்திற்கு ராகு கால நேரத்தில் செல்ல வேண்டும். நாளைய தினம்காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை ராகு காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பைரவர் சன்னிதானத்தில் 2 மண் அகல் விளக்குகளை வைத்து, அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் சிறிது கருப்பு எள் போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். பொதுவாக ஜாதக கட்டத்தில் சனி பகவானால் தோஷம் இருப்பவர்களுக்கு வாழ்வில் நிறைய துன்பங்கள் இருக்கும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால், அவர்களுக்கு சனி பகவானால் கொடுக்கப்படும் துன்பங்கள் கொஞ்சம் குறையும். பாதிப்புகளை எதிர்கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு மன தைரியம் உண்டாகும்.

காலம் நமக்கு கொடுக்கக்கூடிய கஷ்டத்தில் இருந்து நம்மை காக்க கூடிய சக்தி கொண்ட ஒரே கடவுள் காலபைரவர் தான். உங்களுடைய கெட்ட காலத்தில் நீங்கள் ஏதாவது அறிந்தோ அறியாமலோ தவறு செய்திருந்தாலும், அந்த தவறுக்கான மன்னிப்பை இறைவனிடம் மனதார கேட்டுக்கொண்டு, அறிந்தும் அறியாமலும் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யக் கூடிய எந்த தவறையும் இனி செய்ய மாட்டேன் என்ற உறுதிமொழியையும் இறைவனிடம் கொடுத்து, செய்த தப்பை உணர்ந்தாலே போதும். உங்களுக்கான தண்டனை நிச்சயம் குறையும்.

- Advertisement -

சனி பகவானால் எந்த தோஷமும் உங்கள் ஜாதக கட்டத்தில் இல்லை. ஏழரை சனி பாதிப்பு தற்போது இல்லை. ஆனால் சனிபகவானால் எனக்கு எதிர்காலத்தில் கூட எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று கால பைரவரிடம், சனிக்கிழமை வந்திருக்கக்கூடிய இந்த அஷ்டமி திதியில் ராகுகால நேரத்தில் வழிபாடு வைத்தால், கெட்ட காலத்திலும் உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களின் மூலம் பெரியதாக எதுவும் பாதிப்பு ஏற்படாது. கஷ்டங்களில் சிக்கி தவித்தாலும் அதிலிருந்து தத்தளித்து எப்படியாவது மீண்டு உங்கள் வாழ்வில் ஜெயித்து விடுவீர்கள்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கஷ்டமே வராது என்று சொல்லவில்லை. வாழ்க்கை என்றால் அதில் கஷ்ட நஷ்டங்கள் வரும். அந்த கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கான வழியை உங்களுக்கு அந்த கால பைரவர் காலத்தின் மூலமே காட்டி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -