தீபாவளி அன்று, லட்சுமி குபேர பூஜை செய்ய முடியாதவர்கள் கூட, இதை செய்தால் மகாலட்சுமியின் அருளாசி முழுமையாக கிடைக்கும். உங்கள் வீட்டில் பணம் வந்து கொண்டே இருக்கும். அடுத்த தீபாவளிக்கு நீங்களும் கோடீஸ்வரராக மாறலாம்.

lashmi
- Advertisement -

தீபாவளி அன்று வடநாடுகளில் தான் லட்சுமி குபேர பூஜை முன்பெல்லாம் சிறப்பாக நடக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக நம்முடைய ஊர்களிலும் இந்த லட்சுமி குபேர பூஜை செய்யக்கூடிய வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் எல்லோராலும் இந்த லட்சுமி குபேர பூஜையை தீபாவளி அன்று வீட்டில் செய்ய முடியாது. இருப்பினும் லட்சுமி தேவியின் அருள் ஆசியை முழுமையாக பரிபூரணமாக பெற லட்சுமி குபேர பூஜைக்கு இணையான ஒரு சின்ன வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நாளைய தினம் அதாவது அக்டோபர் 24 திங்கட்கிழமை அன்று அதிகாலை வேலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் முன்பாக அதிகாலை 4 மணிக்கு இந்த பூஜையை செய்தாலும் தவறு கிடையாது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை செய்வது பல மடங்கு பலன் கிடைக்கும்.

- Advertisement -

மகாலட்சுமியின் திருவுருவப்படம் அல்லது மகாலட்சுமியின் சிலை இந்த இரண்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மகாலட்சுமியின் திரு உருவ படமாக இருந்தால் அதற்கு முன்பு ஒரு தாம்பூல தட்டை வைத்துக் கொள்ளுங்கள். சிலை இருந்தால் அதை ஒரு தாம்பூல தட்டின் நடுவில் வைத்து விடுங்கள். மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப்பூ, மல்லிப்பூ, எந்த வாசனை நிறைந்த பூவாக இருந்தாலும் மகாலட்சுமிக்கு அலங்காகாரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, 108 நாணயங்களால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

108 ஒரு ரூபாய் நாணயங்கள், அல்லது 108 ஐந்து ரூபாய் நாணயங்கள் அல்லது குபேர காசு என்று இப்போது கடைகளில் விற்கின்றது அது கிடைத்தாலும் அதை வாங்கி மகாலட்சுமியின் பாதங்களில் ஒவ்வொரு நாணயமாக வைத்து ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து இந்த காயினை அப்படியே சேகரித்து ஒரு டப்பாவில் போட்டோ அல்லது ஒரு துணியில் வைத்து முடிச்சு போட்டு பீரோவில் வைத்துக் கொள்ளலாம். நெய்வேதியமாக பசும் பாலில் செய்த பாயாசம் வைக்கலாம். (இந்த பூஜையை தம்பதியர்களாக செய்யலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜையில் அமர்ந்து மந்திரத்தை சொல்லி செய்வது மிக மிக சிறப்பு. எல்லோரும் புத்தாடை அணிந்து மனமகிழ்ச்சியோடு இந்த பூஜையை செய்து பாருங்கள். மனதிற்கு அவ்வளவு நிறைவு கிடைக்கும்.)

- Advertisement -

இந்த காசை செலவு செய்யாதீங்க. வருடம் தோறும் வரக்கூடிய தீபாவளி தினத்தன்று மகாலட்சுமி தாய்க்கு இந்த நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்யலாம். இந்த நாணயத்தை வைத்து, வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று கூட, மகாலட்சுமி தாய்க்கு அர்ச்சனை செய்வது நம்முடைய பண கஷ்டத்தை தீர்க்கும். வருடத்தில் ஒருமுறை நீங்கள் செய்யக்கூடிய இந்த லட்சுமி பூஜை உங்கள் குடும்பத்தின் நிலைமையையே தலைகீழாக மாற்றிவிடும்.

கைநீட்டி யாரிடமும் காசு கேட்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வராது. கடன் வாங்க மாட்டீங்க. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்லும். அந்த அளவுக்கு வலிமையான எளிமையான பூஜை இது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பூஜையை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -