இரவில் செய்யவே கூடாத முக்கியமான 3 விஷயங்கள்? இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம் விரையமாகி கொண்டே இருக்கும்.

tv-cash
- Advertisement -

இரவு நேரத்தில் ஒரு சில விஷயங்களை தெரிந்தோ! தெரியாமலோ! நாம் செய்து வருகிறோம். அத்தகைய விஷயங்கள் வீட்டில் இருக்கும் செல்வ வளத்தை குறைப்பதாக ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரையான நேரத்தை மனிதர்களுக்காகவும், மாலை 6 மணிக்கு மேல் இருக்கும் நேரத்தை பக்திகாகவும் செலவிடப்பட்டால் ஒழுக்கமும், மன அமைதியும் இயல்பாகவே மனிதனுக்கு கிடைக்கிறது. இதனால் தான் மாலையில் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டு வந்தனர். அப்படியிருக்க 6 மணிக்கு மேல் இந்த விஷயங்களை எல்லாம் செய்வதால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை வெளியில் அனுப்புவதற்கு சமம் ஆகிறது. அப்படியான விஷயங்களைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kamatchi-vilakku

இரவு நேரத்தில் ஆறு மணிக்கு மேல் தான் நமக்கு ஓய்வும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் நாம் விரும்பியதை செய்ய நினைக்கிறோம். நம்முடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு அந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தம் குறைவதற்கு ஒரு சிலர் பாடல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டில் மாலை நேரத்திற்கு பிறகு சத்தமான பாடல்கள் ஒலிக்க விடுவது அவ்வளவு நல்லது அல்ல என்று கூறப்படுகிறது. சிலர் ஹோம் தியேட்டரில் அதிகப்படியான ஒலியை ஒலிக்கவிட்டு குத்துப் பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

இது அடுத்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கிவிடும். மேலும் உங்களுடைய மன அழுத்தம் குறைவதற்கு மெல்லிய இசைகளை கேட்பது தான் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு அதிக சத்தத்தை கொடுத்தால் அங்கு இறைநிலை பாதிக்கப்படுகிறது. இறைநிலை பாதிப்படைந்தால் செல்வ வளமும் விரைவாக குறைந்து விடும். இறை வழிபாட்டிற்குரிய அந்த நேரத்தில் இது போன்ற பாடல்களை ஒலிக்க விடுவது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

home-theater-sound

மெல்லிய பாடல்களை நீங்கள் தாராளமாக மன அழுத்தத்தை குறைக்க கேட்கலாம். இல்லையென்றால் இறை வழிபாட்டில் ஆர்வம் இருப்பவர்கள் இறைவனுக்குரிய பாடல்களையும், மந்திரங்களையும் ஒலிக்க விடுவது செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும். ஆறு மணிக்கு மேல் நீங்கள் வீட்டில் ஸ்லோகங்களை ஒலிக்க விடுவது, மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலாகும். இதனால் உங்களுடைய வருமானம் பெருக கூடிய நிறைய வாய்ப்புகள் உண்டு. இறைவனைப் பற்றிய குறிப்புகளையும், வரலாற்றையும் படிக்கலாம். அல்லது வேறு விதமான நல்ல புத்தகங்களையும் படிக்கலாம். இவையெல்லாம் நேர்மறை எண்ணங்களை உங்களுக்கு அதிகரிக்க செய்யும்.

- Advertisement -

வீட்டில் இரவு நேரத்தில் அழுகை சத்தம் கேட்கக்கூடாது என்பதும் ஒரு கூற்றாக இருக்கிறது. சாஸ்திர ரீதியாக ஒரு வீட்டில் அழுகை சத்தம் மாலை 6 மணிக்கு மேல் கேட்டால், அந்த வீட்டில் நிச்சயமாக செல்வ தடை உண்டாகும். நீங்கள் வைக்கும் வேண்டுதல்களை கூட நம்பிக்கையோடு வைக்க வேண்டும். மனதிலிருக்கும் குமுறல்கள் அழுகையாக வெளிப்பட வேண்டிய நேரம் அல்ல. நம்பிக்கையோடு எனக்கு நல்லது நடக்கும், நடத்திக் கொடு என்று உரிமையாக இறைவனிடத்தில் வேண்டலாம். இவ்வாறு வேண்டும் வேண்டுதல்கள் நிச்சயமாகப் பலிக்கும்.

praying-god

வீட்டில் சீரியல் பார்த்துக் கொண்டே அழுவது, அல்லது வேறு ஏதேனும் வகையில் மனதை பாதிக்கும் படியான படங்களை பார்ப்பதும், அதன் மூலம் மனம் பாரமாக உணர்வதும் அந்த நேரத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க வேண்டிய நேரமாக இரவு நேரம் இருக்கிறது. இரவு நேரத்தில் தூங்கும் பொழுது கூட மனதிற்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் படங்களை பாருங்கள். எப்பொழுதும் இரவு தூங்கும் பொழுது மனதில் பாரத்துடன் தூங்காதீர்கள். நல்ல சந்தோஷமான மனநிலையில் தூங்கி பாருங்கள். நிச்சயமாக மறுநாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

- Advertisement -

sleep

அதே போல வீட்டில் இருக்கும், அல்லது மனதில் இருக்கும் வறுமையை, கஷ்டத்தை இரவு நேரங்களில் புலம்புவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், அதை மாற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது நிச்சயமாகக் குறையும் தான். ஆனால் அதனை பகல் பொழுதில் செய்யலாம். இரவு நேரத்தில் வறுமையைப் பற்றி வீட்டில் பேசுவது எதிர்மறை ஆற்றல்களை வீட்டில் ஊடுருவ செய்யும். அமங்கலச் சொற்கள், வறுமை பற்றிய உரையாடல், அழுகை சத்தம், கெட்ட வார்த்தைகள், அதிக சத்தம் இவைகள் வீட்டில் இரவு நேரத்தில் ஏற்படுவதை தவிர்ப்பது உத்தமம். இதன் மூலம் செல்வ வளத்தை குறைத்துக் கொண்டு விடாதீர்கள். மேலும் மேலும் செல்வம் பெருகுவதற்கு உரிய செயல்களையும், பேச்சுக்களையும் பேசிப்பாருங்கள் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் வீணாக செலவு செய்ய மாட்டீர்கள்! உங்களிடம் இருக்கும் பணமும் இரண்டு மடங்காகி விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -