செவ்வாய்க்கிழமை இந்த தண்ணீரில் குளித்தால் உங்கள் கஷ்டங்கள் தோஷங்கள் அனைத்தும் உங்களிடம் சொல்லாமலே ஓடிப் போய்விடும்.

bathing
- Advertisement -

நாம் அடுத்தவர்களுக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு நமக்கு ஒரு நல்லது தான் நடக்கும். அதே நாம் பிறருக்கு ஒரே ஒரு கெட்டது நினைத்தாலும், அது பல மடங்கு துன்பத்தை நமக்கு கொடுத்து விடும். ஆக நீங்கள் நன்மை செய்யாமல் கூட இருந்து விடலாம். ஆனால் மறந்தும் கூட அடுத்தவர்களுக்கு ஒரு தீங்கை நினைக்க கூடாது. அடுத்தவர்களுக்கு கெட்டது நினைக்காமல் இருந்து விட்டாலே போதும். நமக்கு கெடுதல் நடக்காது. முதலில் இதை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை பின்பற்றினாலே வாழ்வில் வரும் பல துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சரி இருப்பினும் நாம் செய்த கர்ம வினைகளுக்கு உண்டான தண்டனைகளும் தோஷங்களும் கஷ்டங்களும் நம்மை பின் தொடரத்தான் செய்கிறது அல்லவா. அந்த சமயங்களில் கடவுளால் கூட நமக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை. இப்படி இருக்கும் போது வரும் துன்பங்களிலிருந்தும், ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்களில் இருந்தும் விலக நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இது ஒரு சிறப்பான குளியல். இந்த குளியலை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்றுதான் இந்த குளியலை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.  அது எந்த குளியல். புற்று மண் குளியல். பெரும்பாலும் வெட்ட வெளிகளில் கூட இந்த புற்று மண் காணப்படும். ஆனால் அப்படி வீதியில் இருக்கக்கூடிய புற்று மண்ணை எடுக்க வேண்டாம். சில கோவில்களில் புற்றை வைத்து வழிபாடு செய்வார்கள். அப்படி கோவிலில் இருக்கக்கூடிய ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

கோவிலில் உள்ள புற்றிலிருந்து தான் இந்த மண்ணை எடுக்க வேண்டும். புற்றுக்கு ஓரங்களில் இருக்கக்கூடிய அந்த மண்ணை எடுத்துக் கொண்டால் கூட போதும். சிறிதளவு மண்ணை வீட்டிற்கு எடுத்து வாருங்கள். செவ்வாய்க்கிழமை அன்று நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் 1/2 ஸ்பூன் அளவு இந்த மண்ணை போட்டு நன்றாக கலந்து விட்டு, பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு அந்த புற்று மண் கலந்த தண்ணீரில் உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். இந்த புனித தீர்த்தத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து தலைக்கு குளித்துக் கொள்ள வேண்டும். இந்த குளியல் மேற்கொள்ளும் போது சோப்பு ஷாம்பு போடாதீங்க வெறும் தண்ணீரில் குளித்துக் கொள்ளுங்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதல் எல்லோரும் இந்த குளியலை மேற்கொள்ளலாம்.

கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகள் தோஷங்கள் அத்தனையும் விலக இந்த குளியல் நிச்சயமாக உங்களுக்கு நன்மை செய்யும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முன்கூட்டியே வேறு எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் நீங்கள் புற்று இருக்கும் கோவிலுக்கு சென்று மண்ணை சேகரித்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

பார்ப்பதற்கு இது சின்ன பரிகாரமாக இருந்தாலும், நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பலன் கூடிய சீக்கிரத்தில் தெரியும். அதாவது தொடர்ந்து 11 வார செவ்வாய்க்கிழமைகள் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் மட்டும் இந்த குளியலை மேற்கொள்ள வேண்டாம். அந்த வாரத்தை விடுத்து அடுத்த வாரத்தில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

நாகதோஷம் இருக்கு செவ்வாய் தோஷம் இருக்கு திருமணம் நடக்கவில்லை. ஜாதகத்தில் தோஷம். பிறந்த நேரம் சரியில்லை. ருதுவான நேரம் சரியில்லை. திருமணம் ஆகி வந்த நேரம் சரியில்லை. குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கு இந்த பரிகாரம் பலன் தரும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -