பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா? தீயை அணைப்பவர்களுக்கும் இந்த தோஷம் உண்டாகுமா என்ன? இது தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க!

ragu-ketu-fire-home
- Advertisement -

பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது தவறான கூற்றாகும். அப்படி பார்த்தால் நிறைய பேர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும். எப்போதோ, என்றோ, முன்னோர்களோ அல்லது நீங்களோ செய்த பாவம் உங்களையும், உங்களுடைய வம்சத்தையும் பின் தொடர்வதாக கூறப்படுகிறது. இதில் சில விஷயங்களை செய்யும் பொழுது சர்ப்ப தோஷம் உண்டாகிறது என்கிறது ஜோதிடம்! அவை என்னென்ன? சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? மேலும் தீயை அணைத்தால் இந்த தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்மையா? அது என்ன தோஷம்? என்பது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பத்தில் ஒருவருக்கு கட்டாயம் ஜாதகத்தில் சர்ப்பம் சம்பந்தப்பட்ட சர்ப்ப தோஷங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. இவை ஏன் ஏற்படுகிறது? பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, இயற்கையை சீரழிப்பது, நோயை தேவையில்லாமல் பரப்புவது, கோவில் சொத்தின் மீது ஆசைபடுவது,, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற விஷயங்கள் செய்பவர்களுக்கு அவர்களுடைய சந்ததியினருக்கும் கூட பாவத்தில் பங்கு கிடைக்கும். அந்த வகையில் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் பின் தொடர்கிறது.

- Advertisement -

ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இவர்களை வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது. தீயை அல்லது தீப்பிடித்துள்ள பொருட்களை கீழே தரையில் போட்டு மிதிக்க கூடாது. இவ்வாறு போட்டு மிதிப்பதால் பூமி தோஷம் ஏற்படுகிறது.

பூமாதேவியை அவமதிக்கும் செயலாக இவை பார்க்கப்படுவதால் பூமாதேவியின் சாபத்தை பெற்று, அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் அவர்களுக்கும், அவர்களுடைய வம்சத்திற்கும் பூமி, மனை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு அந்த பாக்கியமே கிடைக்காமல் கூட போகும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது ஜோதிடம்.

- Advertisement -

ராகு, கேது தோஷம் ஏற்படுபவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்த பாவங்களும் பின்தொடர்வதாக நம்பப்படுகிறது. இதற்கு காரணம் ராகு, கேது இரண்டும் மனிதனுடைய குரோமோசோம்களின் கலவையாக கருதப்படுகிறது. 23 குரோமோசோம்கள் தாயிடம் இருந்தும், 23 குரோமோசோம் தந்தையிடம் இருந்தும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த 46 குரோமோசோம்களும் உயரம், தோல், தலைமுடி, கண் விழிகள், பேச்சாற்றல், தோற்றம், உடல் எடை, பரம்பரை வியாதி, திறமை ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.

இதையும் படிக்கலாமே:
பரம ஏழையாக இருப்பவன் கூட ஏழேழு ஜென்மத்திற்கும் செல்வந்தனாக வாழ வேண்டுமா? ஏழ்மையைப் போக்கும் எருக்கன் பூ பரிகாரம்.

எனவே ஒருவர் தவறு செய்தாலும், அது அவர்களுடைய சந்ததியையும் சேர்த்து பாதிக்கிறது. இவை ராகு, கேது ஆகிய ரெண்டு நிழல் கிரகங்களிடம் சிக்கி 33 ஆண்டுகள் தோஷத்தின் பலன்களை அனுபவித்து பின்னர் நிவர்த்தியாகும் என்கிறது ஜோதிடம், எனவே கூடுமானவரை எவருக்கும் பாவம் செய்யாமல், யாரையும் ஏமாற்றாமல், நல்லவையை மட்டும் செய்து நன்மைகளை அனுபவிப்போம்.

- Advertisement -