பரம ஏழையாக இருப்பவன் கூட ஏழேழு ஜென்மத்திற்கும் செல்வந்தனாக வாழ வேண்டுமா? ஏழ்மையைப் போக்கும் எருக்கன் பூ பரிகாரம்.

erukan
- Advertisement -

பிறக்கும்போதே செல்வந்தர்களாக பிறந்து, வாழ்க்கை முழுவதும் செல்வந்தர்களாக வாழ்வதில் எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது. நம்முடைய தாத்தன் பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்து நமக்கு செல்வந்தர்கள் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறது. ஆனால் ஏழ்மையில் பிறந்து தன்னுடைய சொந்த முயற்சியால் உழைத்து சம்பாதித்து தனக்கு தேவையான பொன் பொருளை சேர்த்து கொண்டவர்கள், தன்னை செல்வந்தர்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். காரணம் அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவர்கள் சேர்த்த பணம் காசு.

இப்படி உங்களுக்கும் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா. விடாமுயற்சியோடு வேலை செய்யுங்கள். கடின உழைப்பை முதலீட்டாக போடுங்கள். நிச்சயமாக இன்றைக்கு இல்லை என்றாலும் ஒரு நாள் நீங்கள் சொந்த முயற்சியில் செல்வந்தர்களாக மாற முடியும். அதில் எந்த ஒரு சந்தேகமும்  கிடையாது.

- Advertisement -

உங்களுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட எந்த கெட்ட சக்தியும் கிட்ட வரக்கூடாது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய வேண்டும். உங்களை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி இருக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் செல்வந்தர்களாக மாற இந்த பரிகாரம் உங்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். ஒரு கண்ணாடி டம்ளர் நிரம்ப சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு பச்சை கற்பூரம் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரில் எருக்கன் பூ போட வேண்டும். செடியிலிருந்து பறித்து வந்த புதிய எருக்கன் பூவை இந்த தண்ணீரில் போட்டு, தயார் செய்த இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் வீட்டின் கிழக்கு பக்கம் வைத்து விடுங்கள். கிழக்கு திசையில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இதை வைத்துக் கொள்ளலாம். (பரிகாரம் அவ்வளவுதான்.) தொழில் செய்யும் இடம், அலுவலகம், கடை எந்த இடத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலும், அந்த இடத்தில் இருக்கும் கெட்ட சக்தி விலகி, உங்களுக்கு நன்மை நடக்கும். நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கும் தொழில் கூட லாபத்தை தரும். நீங்கள் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழிற்சாலை வைத்திருந்தாலும் சரி இந்த சின்ன ஒரு டம்ளர் தண்ணீர், எருக்கன் பூ பரிகாரத்தின் மூலம் கைமேல் பலனை பெற முடியும்.

- Advertisement -

இதே போல உங்களுடைய வீட்டில் காசு பணம் தங்கவில்லை. கடன் பிரச்சனையாக உள்ளது எனும் பட்சத்தில், இந்த பரிகாரத்தை செய்து உங்களுடைய வீட்டு வரவேற்பறையில் வைக்கலாம். எல்லோரும் பார்க்கும் படி இதை வைத்தாலும் தவறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த தண்ணீரை எப்போது மாற்றுவது. தினம்தோறும் தண்ணீரை மாற்ற வேண்டும். பூ வாடிய பிறகு மாற்றினால் போதும். வாடிய பூவை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: துன்பத்தில் துவண்டு போய், யாருமே இல்லாமல் கஷ்டத்தில் தனியாக நிற்கும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அந்த அம்பாளே உங்களுக்கு துணையாக வந்து விடுவாள்.

எந்த நிறத்தில் எருக்கன் பூ கிடைத்தாலும் அந்த பூவை இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்த பரிகாரத்தை செய்யும் போதும் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு முதலில் ஆரம்பிக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கும் அதே விதி தான். குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பிறகு பரிகாரத்தை செய்யுங்கள். சீக்கிரமே வாழ்வில் நல்ல முன்னேற்றம் தெரியும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -