துன்பத்தில் துவண்டு போய், யாருமே இல்லாமல் கஷ்டத்தில் தனியாக நிற்கும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அந்த அம்பாளே உங்களுக்கு துணையாக வந்து விடுவாள்.

durgai-vilakku-agal
- Advertisement -

சில சமயம் நமக்கு தீராத கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இருக்க மாட்டார்கள். தனிமையில் கஷ்டத்தில் நிற்போம். என்ன செய்வது என்றே புரியாது. அப்படிப்பட்ட துன்பங்கள் நமக்கு வருகிறது என்றால் கட்டாயமாக ஏதோ ஒரு கிரக கோளாறாக இருக்கலாம். நம்முடைய நேரம் சரியில்லாமல் இருக்கலாம். அல்லது நம்முடைய கர்ம வினைகூட காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, தவறு உங்கள் பக்கம் இருந்தாலும் சரி அதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு துர்க்கை அம்மனை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்தால் எல்லாம் சுகமாக முடியும்.

கஷ்டங்கள் என்று வந்தாலே செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். தீராத எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு. உங்கள் வீட்டின் அருகில் துர்க்கை அம்மன் கோவில் இருந்தால் அங்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, துர்க்கை அம்மனுக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல முடியவில்லையா. பிரச்சினை கிடையாது. உங்கள் வீட்டில் பூஜை அறையில் செவ்வாய் கிழமை 3:00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீட்டில் ஏற்றக்கூடிய நல்லெண்ணெய் தீபம் தான். காமாட்சியம்மன் விளக்கிலேயே ஏற்றி வைத்துவிட்டு, அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து துர்க்கை அம்மனை மனதார நினைத்து ‘ஓம் தும் துர்காய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வர அந்த அம்பாளே உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க மனமிறங்கி வந்து விடுவாள்.

இக்கட்டான சூழ்நிலையில் வெளியில் எங்கேயோ நன்றாக மாட்டிக் கொண்டீர்கள். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வழி தெரியவில்லை என்றால் நின்ற இடத்தில் இருந்து இந்த மந்திரத்தை 4 முறை மட்டும் சொல்லுங்கள் போதும். அதற்கு அடுத்த நொடி உங்களுடைய மனதிற்குள் எதிர்பாராத ஒரு துணிச்சல் வந்துவிடும். தைரியம் வந்துவிடும். எதையும் சமாளிக்கலாம் என்று தெம்பு வந்துவிடும். அந்த துர்க்கையே உங்களுக்குள் வந்து இறங்கி எல்லா வேலைகளையும் நல்லபடியாக முடித்துக் கொடுத்து விடுவாள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

ஆனால் ஏதோ மந்திரத்தை சொல்ல வேண்டுமே என்று வாயில் சொல்லக்கூடாது. ஆத்மார்த்தமாக துர்க்கை அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு துளி சந்தேகம் இல்லாமல், முழு நம்பிக்கையோடு அம்பாள் மட்டுமே துணை என்று நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை சொல்லும் போது உங்களுடைய மன கண்களில் அந்த துர்கா தேவி தான் தெரிய வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். இந்த மந்திரம் மனக்கவலையாக இருக்கும்போது எவ்வளவு மன நிறைவை தருகிறது என்பது உங்களுக்கே புரியும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மாதத்தில் மறந்தும் கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். உங்களின் குடும்பத்திற்கு நீங்காத பாவம் வந்து சேரும்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வந்தால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சக்தி பிறக்கும். குறிப்பாக ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்ட பெண்கள், எதற்கெடுத்தாலும் அழும் பெண்கள், துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். நீங்களும் அந்த துர்கா தேவியின் ஸ்வரூபமாகவே மாறிவிடுவீர்கள் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -