இந்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் வாரத்தில் 1 நாள் இப்படி தெளித்தால் போதும். துர்க்கை அம்மனின் அருளால் வீட்டை பிடித்த பீடை விலகும்.

Amman-Manthiram-
- Advertisement -

வாழ்க்கை என்றாலே அதில் நல்லது கெட்டது கலந்துதான் இருக்கும். நல்லது நடக்கும் போது எப்படி மனநிறைவோடு ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல் கெடுதல் நடக்கும் போது இதுவும் வாழ்க்கையில் ஒரு பக்கம் என்று நினைத்து, வரக்கூடிய கெட்டதையும் துணிச்சலோடு எதிர்த்துப் போராட வேண்டும். போராடி வாழ்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கியுள்ளது. வாழ்க்கையில் எது நடந்தாலும் சரி, துணிந்து நின்று துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும் என்றால் நமக்கு மன தைரியம் தேவை. மன தைரியமும் உறுதியும் பெற வேண்டும் என்றால் அதற்கு துர்க்கை அம்மன் வழிபாடு நமக்கு கை கொடுக்கும்.

குறிப்பாக தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாளை நினைத்து வழிபாடு செய்து வந்தால், பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். வாழ்வில் போராடி வெற்றியை காண வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் வந்து விடும். அந்த சக்தி தேவியையே, பெண் உருவில் இந்த பூமியில் காணலாம். இந்த பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொரு பெண்களுமே சக்தி தேவியின் மறுஉருவம் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. துர்க்கை அம்மனின் அருள் ஆசியைப் பெற்று, வீட்டில் இருக்கும் தீய சக்தியை அகற்றி, வீட்டில் இருக்கும் தரித்திரத்தை பீடையை அகற்றி, வீட்டை சுத்தம் செய்யக்கூடிய ஒரு தீர்த்தத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை என்று சொன்னாலே, வீட்டை சுத்தப்படுத்தி வீட்டில் தூபம் போட்டு விளக்கேற்றி பூஜை அறையில் வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். இந்த வழிபாட்டோடு சேர்த்து, இந்த மஞ்சள் தண்ணீரையும் இந்த மந்திரத்தை சொல்லி உங்களுடைய வீட்டில் தீர்த்தமாக தெளித்து விடுங்கள். இந்த மஞ்சள் தண்ணீரை வாரத்தில் ஒருநாள் உங்களுடைய வீட்டில் தெளித்து வந்தால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீரும். துன்பங்கள் துயரங்கள் குறையும். உங்கள் வீட்டில் அம்பாள் நிரந்தரமாக அமர்ந்து அருளாசியை கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

ஒரு சிறிய செம்பு பாத்திரம் நிரம்ப சுத்தமான நல்ல தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள்தூள் கலந்து கொள்ளுங்கள். துளசி கிடைத்தால் இரண்டு துளசியை அதில் போட்டுக் கொள்ளலாம். வேப்பிலை கிடைத்தாலும் இரண்டு வேப்பிலையை அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம். வெள்ளிக் கிழமை காலையிலேயே வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த தீர்த்தத்தை பூஜை அறையின் முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை எப்போதும் போல உங்கள் பூஜையை முடித்துவிட்டு இந்த சொம்பு தண்ணிரை உங்கள் கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

‘ஓம் ஹ்ரீம் தும் துர்க்காய சர்வாகர்ஷணாய ஹ்ரீம் தும் பட்’

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்கள் கையில் இருக்கும் தீர்த்தத்தை துர்க்கையம்மனை நினைத்துக்கொண்டே வீடு முழுவதும் மூலைமுடுக்குகளில் தெளித்து விடுங்கள் போதும். உங்கள் வீட்டில் எப்பேர்பட்ட துற் சக்தி தங்கி இருந்தாலும் சரி, கெட்ட எண்ணம் கொண்டவர்கள் உங்கள் வீட்டிற்குள் வந்து சென்று இருந்தாலும் சரி, எல்லா கெடுதலையும் இந்த தீர்த்தம் பஸ்பமாகிவிடும். வீட்டில் நல்லது நடக்க எந்த ஒரு தடையும் இருக்காது. வீட்டில் இருப்பவர்களுடைய மனது எப்போதும் தெளிவாக இருக்கும். வீட்டை பிடித்த பீடை தரித்திரம் அத்தனையும் விலகும். வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -