நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறைகளெல்லாம் இப்பொழுது காணாமல் போய்விட்டது. அவர்கள் சிறிய வீட்டில், அளவான பொருட்களுடன், அழகாக குடும்பம் நடத்தினார்கள். ஆனால் இப்பொழுது இருப்பவர்களோ ஆடம்பரமான வாழ்க்கையில் தான் கவனம் செலுத்துகிறார்கள். அதற்காக சிறிய வீடாக இருந்தாலும் அங்கு அவர்களின் தேவைக்காக நிறைய பொருட்கள் வாங்கி வைத்திருப்பார்கள். அதை போல் பலர் பார்ட்டிகளுக்கு செல்வதற்காகவே நிறைய உடைகள் வைத்திருப்பார்கள். இவ்வாறு வீட்டிலுள்ள பொருட்களை பராமரிப்பதற்கும், அவர்களின் உடைகளை பராமரிப்பதற்கும் என்று தனித்தனி வாஷிங் லிக்விடுகள் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் செலவே இல்லாமல் இந்த ஒரு பொருளை வைத்து மட்டுமே பலவித தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு அந்த பொருள் என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்தலாம்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பயன்: 1
முதலில் நாம் தலைக்கு குளிக்க பயன்படுத்தும் ஏதேனும் ஒரு ஷாம்புவின் சிறிய பாக்கெட்டை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பயன்: 1
வீட்டின் கிச்சனில் அடுப்பு வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் எறும்பு வருவதை தவிர்ப்பதற்காக எரும்பு பொடிகள் எதுவும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த எறும்பு பொடிகள் சாப்பிடும் உணவில் பட்டுவிட்டால் உடல் நலத்திற்கு தீங்காக அமைந்து விடும். இதனால் நாம் தயாரித்து வைத்துள்ள இந்த ஷாம்பு லிக்விடை பயன்படுத்தி எறும்பு வரும் இடங்களில் தெளித்து விட்டால் போதும். அங்கிருக்கும் எறும்புகள் அனைத்தும் உடனே இறந்து விடும்.
பயன்: 2
அதேபோல் வீட்டில் சாப்பிட்ட குப்பைகளை, குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு மறுநாள் காலை பார்க்கும்பொழுது கையில் கூட தொட முடியாத அளவிற்கு குப்பைத் தொட்டி முழுவதும் எறும்புகள் இருக்கும். இதன் மீதும் ஷாம்பூ ஸ்ப்ரேவை சிறிதளவு தெளித்துவிட்டால் எறும்புகள் அனைத்தும் உடனே இறந்துவிடும்.
பயன்: 3
வீட்டில் முகம் பார்ப்பதற்காக மாட்டி வைத்திருக்கும் கண்ணாடி அல்லது பீரோவில் இருக்கும் கண்ணாடி இவற்றில் பதிந்திருக்கும் கறைகளை எளிதில் நீக்குவதற்காக ஒரு சிறிய கிண்ணத்தில் பல்துலக்கும் பேஸ்ட் சிறிதளவு, ஷாம்பு சிறிதளவு இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு, பல் துலக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தி கண்ணாடியின் மீது தடவி நன்றாக தேய்த்து, அதன் பிறகு ஒரு துணி வைத்து துடைத்து விட்டால் கண்ணாடி எந்த வித கறைகளும் இல்லாமல் பளபளவென்று மாறிவிடும்.
பயன்: 4
வீட்டில் உள்ள டிவி, கதவு, ஷோகேஸ் மற்றும் ஜன்னலின் கதவுகள் இவை அனைத்தையும் ஷாம்பு மற்றும் பேஸ்ட் பயன்படுத்தி நன்றாக தேய்த்து சுத்தப்படுத்தினால் போதும். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் புதியது போல மாறிவிடும்.
பயன்: 5
துணிகளில் டீ கரை, காபி கறை படிந்து விட்டால் அவற்றை எளிதில் நீக்க முடியாது. இது போன்ற சமயங்களில் தலைக்கு குளிக்க பயன்படுத்தும் ஷாம்புவிலிருந்து சிறிதளவு எடுத்து துணியில் படிந்திருக்கும் காபி கறையின் மீது தடவி சிறிது நேரம் கைகளால் கசக்கி அதன் பிறகு அலசினால் கறை இருந்த இடம் தெரியாமல் சுத்தமாகிவிடும்.
பயன்: 6
விசேஷங்களுக்கு பயன்படுத்தும் பட்டுப்புடவை அல்லது விலை உயர்ந்த ஆடைகளை ஏதேனும் பார்டிகளுக்கு சென்று விட்டு திரும்பி வந்து அவற்றை கழட்டி அப்படியே வைத்துவிட்டால் அவற்றில் இருந்து வியர்வை நாற்றம் வர ஆரம்பிக்கும். இதற்காக சிறிதளவு தண்ணீரில் ஷாம்புவை கலந்து அதில் ஐந்து நிமிடம் துணிகளை ஊற வைத்து அதன் பிறகு அலசினால் போதும். துணிகள் மிகவும் ஷைனிங்காகவும், வாசனையாகவும் இருக்கும்.
பயன்: 7
வாஷிங் மெஷின்களில் துணி துவைக்கும் பொழுது விரைவில் துணிகள் வெளுத்துவிடும். இவற்றை தவிர்க்க துணி துவைக்கும் பொழுது அதனுடன் ஒரு ஸ்பூன் ஷாம்புவை கலந்து துவைத்தோம் என்றால் துணிகளின் நிறம் மங்காமல் பளிச்சென்று ஷைனிங்காகவே இருக்கும்.