உங்க உடலில் ரத்தம் குறைவாக இருக்கிறதா? ஹீமோகுளோபின் அளவு ஒரே மாதத்தில் அதிகரிக்க இதை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்!

green-drink-blood
- Advertisement -

நம் உடம்பில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது இரத்த சோகை நோய் உண்டாகிறது. இதனால் பல்வேறு நோய்களை எதிர்கொள்ள முடியாமல் உடல் ஆனது திணறுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், நம் உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்யக்கூடிய இந்த அற்புத பானம் பெரும்பாலான டாக்டர்கள் பரிந்துரைப்பது ஆகும். தினமும் ஒரு டம்ளர் இதைப் பருகுவதால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை டெஸ்ட் செய்து பார்க்கலாம்! ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பானத்தை எப்படி தயாரிப்பது? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

உடலில் ரத்த சோகை ஏற்பட்டால் அடிக்கடி மயக்கம் உண்டாகும். உடலில் வலு இல்லாதது போல எப்போதும் சோர்வுடன் காணப்படுவார்கள். ஒருவரது கண்களை பார்த்தே அவருக்கு ரத்தசோகை நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம். ரத்தசோகை நோய் இருப்பதை உறுதி செய்துவிட்டால் நீங்கள் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பானத்தை தயாரித்து பருகலாம்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இந்த பானம் மற்ற சில ஆரோக்கியமான விஷயங்களை கூட நமக்கு கொடுக்கிறது எனவே இதனை ரத்த சோகை நோய் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் யார் வேண்டுமானாலும் பருகலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் அதே அளவிற்கு ஒரு கைப்பிடி பச்சை முருங்கை இலைகளை சேர்த்து கொள்ளுங்கள். இலைகள் மட்டுமல்லாமல் முருங்கை காம்புகளில் அதைவிட அதிக சத்துக்கள் உண்டு எனவே முருங்கையின் இலை காம்புகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் 4 டம்ளர் தண்ணீர் மூன்று டம்ளராக வற்றும் அளவிற்கு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி மூன்று பேர் குடிக்கலாம். இதை அப்படியே வெதுவெதுப்பாக குடித்து விடலாம். கீரைகளையும் மென்று தின்பது ரொம்ப நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ரத்தசோகை நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மீட்டுக் கொண்டுவரும் ஆற்றல் கொண்டுள்ளது. கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் சமையலில் அதனை பலரும் ஒதுக்கி வைப்பது உண்டு.

- Advertisement -

ரத்த சோகையினால் தலை முடி உதிர்தல் பிரச்சினையும் உண்டாகும். கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலை சாற்றை பருகும் பொழுது தலைமுடி உதிர்வதும் நின்று விடும். வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண்பார்வைக் கோளாறுகளை கூட சரிப்படுத்தும் ஆற்றல் இந்த பானத்திற்கு உண்டு. இதில் இருக்கும் வைட்டமின்கள், கால்சியம், அயன் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரையில் அசைவத்திற்கு இணையான எட்டு அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். 15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, 10 நிமிடம் ஆற வைத்து பின்னர் குடித்து விடுங்கள். இது சாதாரண தண்ணீரை போலவே இருக்கும் கசக்காது எனவே தாராளமாக அனைவரும் பருகலாம். மேலும் சிலர் இதில் உப்பு, மிளகு சேர்த்து குடிப்பது உண்டு. சூப் செய்வது போல இஞ்சி, பூண்டு எல்லாம் இடித்து சேர்த்து குடிக்கவும் செய்யலாம். தினமும் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் ஒரு முறையாவது குடித்து வாருங்கள், நல்ல உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

- Advertisement -