உங்களைத் துன்புறுத்தும் எதிரிகள் உங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல், விலகி ஓட இந்த ஒரு பொருளை மண்ணில் புதைத்தால் போதும்

enemy
- Advertisement -

என்னதான் நாம் உண்டு, நமது வேலை உண்டு என்று இருந்தாலும், நம்மை தொல்லை செய்வதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். புதியதாக திருமணம் ஆகி சென்றால் அந்த வீட்டில் பிரச்சனை கொடுப்பதற்காகவே ஒருவர் இருப்பார். புதியதாக வேலைக்கு சென்றால் நமக்கு முன் வேலை பார்ப்பவர்கள் நம்மை அடியோடு விரட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தொழில் செய்யும் இடத்தில் நமக்குப் போட்டியாக இன்னொருவர் இருப்பார். இவ்வாறு செல்கின்ற இடத்திலெல்லாம் காரணமே இல்லாமல் எதிரிகள் உருவாகி விடுவார்கள். மற்றவர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள பொறாமை தான் இப்படி நம்மை துன்புறுத்த காரணமாக அமைகிறது. இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளையும், தெரியாத எதிரிகளைம் நம்மை விட்டு தூரமாக விலக்கி வைக்க இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்தால் போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

யாருக்கும் துரோகம் செய்யாமல், எவரையும் பழிவாங்காமல், யாரையும் ஏமாற்றாமல் நேர்மையான வழியில் நமது வாழ்க்கைப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், சில தடைகள் வருவது என்பது இயல்பு தான். ஏனென்றால் இன்றைய சூழ்நிலை ஒருவரைக் கீழே தள்ளி மற்றவர்கள் மேலே ஏற வேண்டும் என்று மாறி விட்டது. அப்படி போட்டியும் பொறாமையும் அதிகரித்துவிட்டது.

- Advertisement -

இப்படி வேலை செய்யும் இடத்தில் தான் முன்னேற வேண்டும் என்பதற்காக தேவையில்லாத பழியை ஒருவர் மீது போடுவதும், அவரை சம்மந்தமே இல்லாத பிரச்சனையில் மாட்டி வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. அது போல வியாபாரத்தில் தனது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக மற்றவரின் வியாபாரத்தை தடுப்பதற்கும் பல வழிகளில் முயற்ச்சி செய்வார்கள்.

இப்படிப்பட்ட எதிரிகளை அழிக்க நமது வீட்டில் இருக்கும் ஒரு பொருள் மட்டும் போதும். இது பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதில் அபரிமிதமான சக்திகள் இருக்கின்றன. இந்த ஒரு பொருளை வைத்து முற்காலத்தில் முனிவர்கள் பலவித தாந்திரீக வழிபாடுகளை மேற்கொண்டனர். அவ்வாறு அற்புத சக்தி வாய்ந்த பொருள் நாம் சமையலுக்கு தினம்தோறும் பயன்படுத்தும் கடுகு தான். இதனை வைத்து எதிரிகளை நம்மிடமிருந்து அடியோடு விரட்ட முடியும்.

- Advertisement -

இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்வதற்கு நாள், கிழமை, நேரம் எதுவும் தேவை இல்லை. எந்த கிழமையில் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதனை செய்யலாம். முதலில் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் முழுவதுமாக கடுகை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகளின் பெயரை மனதில் நினைத்து கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

உங்களுக்கு தெரியாத எதிரிகள் இருந்தால் எதிரிகளின் தொல்லை தீர வேண்டுமென்று நினைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கடுகை கையில் எடுத்து, 9 முறை இந்த பேப்பரில் போட வேண்டும். ஒவ்வொரு முறை போடும் பொழுதும் உங்கள் எதிரிகளின் பெயரை சொல்லி அவர்களின் தொல்லை தீரவேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பேப்பரை மடித்து அதனை உங்கள் வீட்டிற்கு வெளியே மண்ணில் புதைத்து விட வேண்டும். இவ்வாறு செய்ய உங்கள் எதிரிகளின் தொல்லை உங்களை விட்டு விலகி விடும்.

- Advertisement -