ஈரேழு ஜென்மங்களாக நம்மை பின்தொடரும் கர்மவினைகளை கரைப்பதற்கு, ஒருமுறை இப்படி குளித்தாலே போதும்.

bathing
- Advertisement -

நாம் செய்த பாவத்திற்கு மட்டும் தான் இந்த ஜென்மத்தில் கர்மவினையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா, என்று கேட்டால், நிச்சயம் இல்லை. நாம் செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த பாவங்கள், அல்லது நம்மை சார்ந்தவர்கள் செய்த பாவங்கள், பாவம் நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு அந்த பாவத்தை தட்டிக் கேட்காமல் இருப்பதனால் வந்த பாவங்கள், என்று பாவங்களும் கர்ம வினைகளும் நம்மை பின்தொடர்ந்து வாட்டி வதைக்கின்றது. கஷ்டங்களை வரிசைகட்டி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மனிதர்களுக்கு கலியுகத்தில் துன்பம். நாம் என்ன விதைத்தோமோ, அது தானே முளைக்கும். சரி, ஜென்ம ஜென்மங்களாக நம்மை தொடர்ந்து வரும் கர்மவினைகளை குறைக்க என்ன வழி. இரண்டு தீர்வு உள்ளது. அதை இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்வோமா.

முதலில் இது ஒரு சுலபமான பரிகாரம். பெண் குழந்தை பிறந்தாலே அந்தப் பெண் குழந்தையை பாவமாக கருதுகின்றது இந்த உலகம். ஆனால், சாஸ்திரப்படி எவரொருவர் பெண் குழந்தையைப் பெற்று வளர்த்து அந்த பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கிறாரோ, அவருக்கு 27 தலைமுறைக்கு தொடரக்கூடிய பாவத்திற்கான விமோசனம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆக பெண் குழந்தையைப் பெற்று விட்டோமே, என்ன பாவம் செய்தோமோ என்று யாருமே இனி யோசிக்காதீங்க. பெண் குழந்தையை நீங்கள் பெற்றதற்கு பெருமைப்படுங்கள். நீங்கள் செய்த பாவம் மட்டுமல்ல, உங்களுடைய முன்னோர்களின் கர்மவினைகளும் உங்களுடைய தலைமுறையில், கன்னிகாதானம் செய்து கொடுக்கும்போது தீர்க்கப்படுகிறது.

இரண்டாவதாக ஒரு பரிகாரம். இந்த பரிகாரம் வீரமாமுனிவரால் நமக்கு சொல்லப்பட்ட பரிகாரம். பொதுவாகவே கங்கை தீர்த்தத்தில் குளித்தால் நம்மை பிடித்த பாவங்கள் கர்மங்கள் நம்மை விட்டுப் போகும் என்று சொல்லுவார்கள். எல்லோராலும் கங்கை நீரில் நீராட முடியாது. கங்கை நீரில் நீராடுவதற்கு இணையான ஒரு குளியலை இந்த மூலிகைப் பொடிகளை போட்டு குளித்தால் பெற முடியும். பாவங்கள் தீரும். கங்கை தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய நெருஞ்சில் பொடி, குப்பைமேனி பொடி, இந்த இரண்டு பொடியையும் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த இரண்டு பொடியையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரில் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்று எழுதி விட்டு கங்கா தேவியை நினைத்து இந்த தண்ணீரில் குளித்து விட்டால், உங்களை பிடித்த பாவங்களும் கர்ம வினைகளும் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை இப்படிக் குளிக்கலாம் என்ற சந்தேகம் எழும். இதற்கு கணக்கு எல்லாம் எதுவுமே கிடையாது. மாதத்திற்கு ஒரு முறையோ, மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ, இந்த இரண்டு பொடியை போட்டு குளிக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. முடியாதவர்கள் ஒரே ஒருமுறை மட்டுமாவது இந்த ஸ்நானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்மாக்கள், பாவ புண்ணிய கணக்குகள் இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு என்பவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -