வைரம் போல உங்கள் முகம் மின்ன வெறும் ஏலக்காய் போதும். வச்ச கண்ணு வாங்காம எல்லோரும் உங்களையே பாப்பாங்க.

face3
- Advertisement -

நம்முடைய அனுபவத்திலேயே நாம் சில பேரை பார்த்து இருப்போம். யாராவது வீதியில் நடந்து செல்லும் போது நம்முடைய கண்கள் நம்மை அறியாமலேயே அவர்களை உற்றுநோக்கி கவனிக்கும். காரணம் அவர்களுடைய பளபளப்பான சருமமும், அழகான தோற்றமும் தான். நாமும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய சரும பொலிவை மெருகேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே என்ன செய்வது. ஒரு சூப்பர் நைட் கிரீம் உங்களுக்காக.

இந்த க்ரீம் செய்ய நமக்கு இரண்டு பொருட்கள் தேவை. ஏலக்காய், கேரட். முதலில் ஒரு கேரட்டை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 1/4 கப் அளவு சாறு கிடைத்தால் போதும். இந்த சாறை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள். இதோடு 5 ஏலக்காய்களை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கேரட் சாறுடன் சேர்த்த ஏலக்காயை அப்படியே ஸ்டவ்வில் வைத்து மிதமான தீயில் லேசாகச் சூடு செய்ய வேண்டும். இந்த கேரட் சாறு ஏலக்காயோடு சேர்த்து நன்றாகக் கொதித்து லேசாக திக்காகும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பின்பு இதோடு 1 ஸ்பூன் அளவு ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். நமக்குத் தேவையான க்ரீம் தயாராகிவிட்டது. இது பார்ப்பதற்கு லேசாக ஜெல் போல இருக்கும். தினமும் இரவு தூங்கச் செல்லும் போது உங்களுடைய முகத்தில் இந்த ஜெல்லை தொட்டு ஆங்காங்கே புள்ளிகள் போல வைத்து விட்டு, லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள். முகம் கழுவ வேண்டாம். அப்படியே உறங்கச் செல்லலாம். மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விட்டால் உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

கண்ணுக்குக் கீழே கருவளையம் இருந்தால் அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக இந்த கிரீமை வைத்து கண்ணை சுற்றி அப்படியே மசாஜ் செய்து விட்டு விடுங்கள். வாயை சுற்றி கருப்பு வளையம் இருந்தால் அந்த இடத்திலும் இந்த கிரீமை கொஞ்சம் அதிகமாக போட்டுக் கொள்ளலாம். முகப்பரு உள்ளவர்கள் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த கிரீமை பயன்படுத்தலாம். 12 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வந்தால் முப்பதே நாட்களில் ஊர்ல இருக்கிறவங்க வச்ச கண்ணு வாங்காம உங்களைத்தான் பாப்பாங்க. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -