வெள்ளிக்கிழமை ஏலக்காயோடு இந்த ஒரு பொருளை சேர்த்து வாங்கினால் வாழ்க்கை ஏறு முகத்தில் செல்லும்.

mahalashmi
- Advertisement -

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது படிப்படியாகத்தான் இருக்க வேண்டும். ஒரே அடியாக வாழ்க்கைக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைத்து, எல்லா செல்வங்களும் கிடைத்து, புகழின் உச்சிக்கு சென்று விட்டால், அவனுக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமலேயே போய்விடும். இன்று வாழ்க்கையில் உயரத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் எல்லாமே ஒரு காலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான். கஷ்டமே படாமல் எல்லாம் நமக்கு கிடைத்து விட்டால், நம் கையில் இருக்கக்கூடிய பொருட்களின் அருமை நமக்கு தெரியாது. ஆகவே, இன்று கஷ்டப்படுபவர்கள் யாரும் சோகத்தில் இருக்க வேண்டாம். நாளை நமக்கு விடிவு காலம் பிறந்துவிடும். படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

வாழ்க்கையில் படிப்பனையான முன்னேற்றத்தைப் பெற, மகாலட்சுமியின் அருளாசியை பெற, நாம் சுலபமாக நிறைய விஷயங்களை செய்யலாம். அதில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்யும் போது வாழ்க்கையில் வரக்கூடிய தடைகள் விலகும். படிப்படியான முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

பணத்திற்காக மட்டும் இந்த பரிகாரம் அல்ல. உங்களுடைய மனதிற்குள் என்ன குறிக்கோள் இருக்கிறதோ, அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். வெள்ளிக்கிழமை மங்களகரமான ஒரு நாள். அன்றைய தினம் வீட்டில் உள்ள மகாலட்சுமிக்கு பூஜை செய்வது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை பூஜையில் மகாலட்சுமி பாதங்களில் ஏலக்காய் வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கடைக்கு சென்று ஏலக்காயோடு, கசகசா ஒரு 50 கிராம் அல்லது 100 கிராம் வாங்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஏலக்காயையும் புதுசாக 5 ரூபாய்க்கு வாங்கினால் கூட போதும். இந்த இரண்டு பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து, ஒரு கிண்ணத்தில் கசகசாவை கொட்டி, அதன் மேலே ஏலக்காயை வைத்து, மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜை அறையை எப்படி அலங்காரம் செய்வீர்களோ, அதே போல அலங்காரம் செய்துவிட்டு, மகாலட்சுமிக்கு ஒரு பால் பாயசம் நிவேதனமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமியின் பாதங்களில் சின்ன கிண்ணத்தில் கசகசாவும் ஏலக்காயும் இருக்கிறது அல்லவா அது நம்முடைய குடும்பத்திற்கு நிறைய நன்மைகளை செய்யும்.

- Advertisement -

மனதார மகாலட்சுமியிடம் பிரார்த்தனை செய்து கொள்ள, உங்களுக்கு எந்த வரம் வேண்டுமோ அதை மகாலட்சுமியின் முன்பு அமர்ந்து கேளுங்கள். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து, உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பால் பாயாசத்தை வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பிரசாதமாக குடித்து விடலாம். ஏலக்காயையும் கசகசாவையும் அப்படியே ஒரு டப்பாவில் போட்டு சமையல் அறையில் வைத்து சமைக்கும் போது நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு முன்பு ஏலக்காயையும் கசகசாவையும் வாங்கி வைத்து நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் பலிக்கும் என்பது நம்பிக்கை. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இப்படி செய்யலாம். அப்படி இல்லை என்றால் பௌர்ணமி தினத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மகாலட்சுமியின் அருள் ஆசியை பெறுவதற்கு இதுவும் ஒரு சுலபமான வழி. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் தீருவதற்கு சீக்கிரமே நல்ல வழி கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -