எள்ளு போட்டு புதினா சட்னி இப்படி செஞ்சு பாருங்க வெறும் வாயிலேயே சாப்பிடலாம் அவ்வளவு டேஸ்டாக இருக்கும்!

takkali-puthina-chutney2
- Advertisement -

இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட துவையலாக இந்த எள்ளு புதினா சட்னி வைத்து சாப்பிடலாம். ரொம்பவும் சுவையான இந்த எள்ளு புதினா சட்னி ஆரோக்கியமானதும் கூட. சுலபமான முறையில் நம் வீட்டிலேயே எப்படி எள்ளு புதினா சட்னி அல்லது துவையல் டேஸ்ட்டியாக அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எள்ளு புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு – நாலு டீஸ்பூன், கடலைப்பருப்பு – இரண்டு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன், பூண்டு பல் – நாலு, பச்சை மிளகாய் – 4, காய்ந்த மிளகாய் – 4, தக்காளி – இரண்டு, புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், வர மிளகாய் – 1, கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

எள்ளு புதினா சட்னி செய்முறை விளக்கம்:
புதினா சட்னி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை எள்ளு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை மேலே கூறியுள்ள அளவில் படி சேர்த்து வாசம் வர நல்ல பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அப்படியே ஆற விட்டு விடுங்கள்.

பின்னர் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்கு பச்சை வாசம் போக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை நன்கு அப்படியே ஆற விட்டுவிட வேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துள்ள பொருட்களை ஒரு முறை கொரகொரவென அரைத்து எடுத்து வந்து விடுங்கள். பிறகு ஆறிய இந்த மிளகாய் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு பொடி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ் ஆன புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மற்றும் புதினா இலைகள் சுருள ரெண்டு நிமிடத்தில் வதங்கி விடும். அதன் பிறகு இந்த பொருட்களையும் ஆற வைத்து எல்லா பொருட்களையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, ஒரு வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து அரைத்து எடுத்து வந்த இந்த சட்னியையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு உங்கள் தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதாங்க ரொம்ப சுலபமான முறையில் எள்ளு புதினா சட்னி இப்படி செஞ்சு பாருங்க வெறும் வாயிலேயே சாப்பிடுற அளவுக்கு அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -