நீண்ட நாள் எண்ணம் நிறைவேற கிராம்பு பரிகாரம்

kirambu pariharam
- Advertisement -

ஒவ்வொருவர் மனதிலும் பல எண்ணங்கள் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணம் மட்டும் நீண்ட நாட்களாக திரும்பத் திரும்ப மனதிற்குள் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும். பல பிரச்சினைகள் இருப்பவர்கள் அனைத்து பிரச்சினையும் அடிக்கடி நினைக்க மாட்டார்கள். அந்தப் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினையை மட்டுமே அடிக்கடி நினைத்து கவலைப்படுவார்கள். அது போல் தான் எந்த எண்ணம் அது கடன், பிரச்சனை, ஆசை என்று எந்த எண்ணமாக இருந்தாலும் மனதிற்குள் அடிக்கடி தோன்றும் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு கிராம்பு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் நினைக்கும் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் அவர் அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை செய்ய வேண்டும். அப்படி முயற்சிகளை செய்தும் அதனால் எந்த பலனும் இல்லை என்னும் பொழுது இந்த மாதிரியான சில பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்வதன் மூலம் அவர்களின் எண்ணம் ஈடேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று கிழமைகளில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை மாலை 6:30 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு கிராம்பு இருந்தால் போதும். ஏதாவது ஒரு அமைதியான அறையாக பார்த்து தனிமையில் அமர வேண்டும். தரையில் அமரும்பொழுது ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர வேண்டும்.

கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர வேண்டும். பிறகு உங்கள் இடது நாசியை அதாவது மூக்கின் இடது பக்கத்தை விரலை வைத்து மூடிக்கொண்டு வலது பக்கத்தில் மட்டும் மூச்சை விட வேண்டும். அவ்வாறு மூச்சை விடும் பொழுது எந்த எண்ணம் உங்கள் மனதில் அதிகமாக இருக்கிறதோ அந்த எண்ணத்தை மனதார நினைத்துக் கொண்டு மூச்சை விட வேண்டும். அப்படி விடும் மூச்சை உங்களுடைய வலது கையில் நீங்கள் வைத்திருக்கும் கிராம்பின் மீது படும் அளவிற்கு விட வேண்டும்.

- Advertisement -

அதாவது இந்த கிராம்பில் உங்களுடைய மூச்சுக்காற்று முழுமையாக பட வேண்டும். இப்படி உங்கள் மனதில் இருக்கக்கூடிய எண்ணத்தை நினைத்து இதை செய்ய வேண்டும். பிறகு இந்த கிராம்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே அதாவது தெருவிற்கு சென்று விட்டு மறுபடியும் வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது உங்கள் வலது கையில் இருக்கும் கிராம்பை உங்களுக்கு பின்னால் தூக்கி எறிய வேண்டும்.

தூக்கி எறிந்து விட்டு வீட்டிற்குள் வர வேண்டும். இவ்வாறு நினைத்த காரியமும் எண்ணமும் நிறைவேற வேண்டும் என்று முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் பொழுது அந்த எண்ணம் நிறைவேறுவதற்குரிய வழிகள் உங்கள் கண்ணிற்கு தெளிவாக தெரியும்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

இந்த எளிமையான கிராம்பு பரிகாரத்தை செய்யும் பொழுது அமைதியாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் முழு மனதோடு, நம்பிக்கையோடு அந்த எண்ணத்தை மட்டுமே மனதில் நினைத்து செய்தால் அதற்குரிய பலனை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -