வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

moon
- Advertisement -

மாதாமாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனமும் சிறப்பு தான். அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக்கூடிய, வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி வழிபாடு செய்வது, இந்த அற்புதம் வாய்ந்த பிறை தரிசனத்தை பார்ப்பதன் மூலம் நாம் என்ன மாதிரியான பலனை எல்லாம் பெறலாம் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் தேவைப்படுபவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

கார்த்திகை மாத மூன்றாம் பிறை தரிசனம்

நாளைய தினம் அதாவது 14.12.2023 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேலாக இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாளை மாலை நேரத்தில் 6.30 மணிக்கு மேல் மேற்கு திசையில் பிறை நிலா தெரியும். மேகமூட்டமான இடங்களில் தெரியாது. கவலைப்படாதீங்க இருந்தாலும் மேற்கு பார்த்தவாறு இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பிறை சந்திரனை தரிசனம் செய்வதன் மூலம் நமக்கு சிவன் பார்வதி பிள்ளையார் இவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாழக்கிழமையோடு இந்த பிறை தரிசனம் வந்திருப்பதால் குரு பகவானின் ஆசிர்வாதமும் நமக்கு சேர்ந்து கிடைக்கப் போகிறது. அது மட்டும் கிடையாது. வியாழக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 8:00 மணி வரை குபேர லட்சுமிக்கு சொந்தமான நேரம். குபேரருக்கு சொந்தமான நேரம். ஆக குபேரரின் அருள் பெறவும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.

நாளை மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளுங்கள். குரு பகவானின் அனுகிரகம் கிடைக்கும். பச்சை நிற குங்குமம் இருந்தால் அதை எடுத்து கொஞ்சம் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். குபேரரின் அருளும் கிடைக்கும்.

- Advertisement -

இந்த இரண்டையும் நெற்றியில் வைத்துக் கொண்டு சந்திரனை பார்த்தால் பணக்கஷ்டம் தீரும். மாலை 6:30 மணிக்கு மேல் கொஞ்சம் வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டும். பால்கனி மொட்டை மாடி இந்த இடத்தில் வெட்ட வெளியாக இருக்கிறதோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் ஒரு கிழங்கு மஞ்சள், 1 ரூபாய் நாணயம் வைத்துக் கொள்ளுங்கள்.

சந்திர பகவானை பார்த்து இரு கைகளையும் ஏந்திக் கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளுக்கு நடுவே இந்த ஒரு ரூபாய் நாணயமும் கிழங்கு மஞ்சளும் இருக்கட்டும். சந்திர பகவானினே என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டம் மனக்கஷ்டத்திற்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும்.

- Advertisement -

வீட்டில் ஏதாவது சுப காரியத்தடை இருந்தால் அதுவும் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த இரண்டு பொருளையும் அப்படியே ஒரு கிண்ணத்தில் போட்டு கொண்டு போய் பூஜை அறையில் வைத்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து இதை அப்படியே எடுத்து பீரோவிலும் வைக்கலாம்.

மூன்று நாட்கள் இந்த பொருள் பீரோவில் இருக்கட்டும். அந்த ஒரு ரூபாய் நாணத்தை எடுத்து சுப காரிய நிகழ்ச்சிகள் செய்யும்போது அந்த செலவுக்கு பயன்படுத்தலாம். தங்கம் வாங்க, பூ வாங்க, மஞ்சள் குங்குமம் வாங்க அந்த ஒரு ரூபாயை சேர்த்துக் கொள்ளலாம். அந்த மஞ்சளை வீட்டில் இருக்கும் பெண்கள் இழைத்து முகத்தில் பூச பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எளிமையான வழிபாடு உங்களுக்கு சந்திர பகவானின் அருள் ஆசியை பெற்றுத்தரும்.

கூடுமானவரை நாளை சந்திர தரிசனத்தின் போது நெற்றியில் மஞ்சள் திலகம், மஞ்சள் ஆடையை அணிந்து கொள்ளுங்கள். மஞ்சள் நிற சாமந்திப்பூ ஒன்றை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தால் பூ தேவை கிடையாது. பூஜை அறையில் மஞ்சள் பூக்களால் அலங்காரம் செய்வது இன்னும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிப்படி பூஜை அறையில் எந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

இந்த சந்திர தரிசனத்தின் போது ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். நல்லதே நடக்கும். எளிமையான இந்த சின்ன சின்ன பரிகாரங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை தரும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -