வீட்டில் பச்சை கற்பூரத்தை இப்படி ஏற்றினால் போதும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் எண்ணியபடி ஈடேறும்.

pachai-karpooram-vilakku
- Advertisement -

நம்மில் நிறைய பேர் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நினைத்த விஷயத்தை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்த காட்டுகின்றோமா? என்றால், நிச்சயம் கிடையாது. நாளை அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் கண்விழிக்க மாட்டோம். நாளை முன்கூட்டியே வீட்டு வேலை, அலுவலக வேலை எல்லாவற்றையும் சோம்பேறித்தனம் இல்லாமல் முடித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அதை செயல்படுத்த மாட்டோம்.

vetrilai

இப்படி நாமுடைய எண்ணங்கள் ஒன்றைக் கூட சரியாக செயல்படுத்தி இருக்க மாட்டோம். ஆனால் சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை அடுத்த நாள் நடத்தி முடிப்பார்கள். அதாவது டைம் டேபிள் போட்டு வைத்ததுபோல இந்த நேரத்திற்கு இதை தான் செய்ய வேண்டும். இதை செய்து முடித்து விட்டோமா, அடுத்த இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று சரியாக அவர்களுடைய பணியை முடித்து விடுவார்கள்.

- Advertisement -

இது அன்றாட பணிக்கு. இது தவிர சிலர் தங்களுடைய வீட்டில் சுப காரியங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் செய்யது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணங்கள் எல்லாம் கூட இதில் அடங்கும். நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்கள் நினைத்தால் அந்த எண்ணம் ஈடேறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

arasa-maram1

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை இரண்டு இலைகள். ஒரு வெற்றிலை, ஒரு அரச இலை, கட்டாயம் தேவைப்படும். ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம். பூஜை அறையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எப்போதும் போல பூஜை அறையை அலங்காரம் செய்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய தாம்புல தட்டில் வெற்றிலைக்கு மேலே அரசை இலையை வைத்துக் கொள்ள வேண்டும். அரச இலைக்கும் மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து அந்த கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேற வேண்டும். முயற்சி எடுக்கும்போது உங்களுடைய மூளையோ மனதோ பின்னடைய கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த கற்பூர ஆரத்தியை இறைவனுக்கு காண்பித்துவிட்டு, அந்த ஆரத்தியை உங்கள் முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் அந்த ஆரத்தி தட்டுக்கு முன்பாக பூஜை அறையிலேயே இறைவனை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

sudam

இப்போது இறைவனை மனதார நினைத்து உங்களுக்கு என்ன தேவையோ என்ன எண்ணங்கள் ஈடேற வேண்டும் அதை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதை எந்த நாளில் செய்ய வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் செய்தால் மிக மிக சிறப்பு. தினம்தோறும் உங்களால் இதை செய்ய முடியும் என்றாலும் செய்யலாம். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் வரை. அல்லது உங்களுடைய தினசரி வேலையில் உங்களுடைய முயற்சிகளில் பின்னடைவு ஏற்படுகின்றது.

praying-god1

ஏதோ ஒரு சோகம் உங்களுக்குள் வந்து விட்டது என்றால் உடனடியாக இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த கற்பூரத்தில் இருந்து வெளிவரக்கூடிய புகையை சுவாசிக்கும் போது உங்களை அறியாமலேயே ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். அந்த புத்துணர்ச்சி உங்களை சுறுசுறுப்பாக செயல்படுத்தும். உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -