இன்றுவரை எனக்குள் இருக்கும்
இனம் புரியாத கேள்வி..
என்னுள் நீ எப்படி வந்தாய்
என்பது தான்..
இதையும் படிக்கலாமே:
தொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை
காதல் ஒரு இன்ப தீ ஆனால் அது யாரையும் எரிப்பதில்லை. மாறாக அது அன்பு மழையை பொழிய செய்யும். அதனை எதிர்த்து எத்தனை வலிமையோடு நாம் சண்டை இட்டாலும் அது நமது மனதில் எப்படியாவது புகுந்து நம்மை ஆட்கொள்ளும். அதன் பிறகு நாம் அதற்க்கு கட்டளை இட முடியாது. மாறாக அதுவே நமக்கு கட்டளை இடும். அதுவே நமக்கு எஜமானாக மாறும். இதனாலேயே பலரும் தன் தாய் தந்தையரை எதிர்த்து கூடு காதல் திருமணம் செய்கின்றனர்.
இப்படி இனம்புரியாத பல அனுபவங்களை தரும் காதலின் ஆரம்ப காலம் ஒரு மன போராட்டத்தை நமக்குள் உண்டாக்கும். இவனையோ அல்லது இவளையோ நாம் காதலிக்கலாமா கூடாத என்பது தான் அது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் நாம் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் காதல் நம்மை சும்மா விடாது. துரத்தி கொண்டே இருக்கும். இறுதியாத நம்மை காதல் வலையில் விழ செய்து அது தன் ஆட்டத்தை துவங்கும்.
காதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், மனதை உருக்கும் அன்பு கவிதைகள் என கவிதை தொகுப்பு பல இங்கு உள்ளது.