காரிய வெற்றி தரும் எருக்க இலை வசியம்

erukku ilai
- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். அவரை நினைத்து நாம் எந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விநாயகப் பெருமானின் அருளைப் பெற்ற எருக்கு இலையை நாம் எப்படி பயன்படுத்தினால் நாம் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு காரியத்திற்கு நாம் செல்வதாக இருந்தாலும் அந்த காரியம் நியாயமான காரியமாக இருந்தால் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அதோடு மட்டுமல்லாமல் வெளியில் செல்லும்போது எந்தவித பகையும் நம்மை அண்டாமல் இருக்கவும் நாம் எந்த இலையை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த இலையை எப்படி வசியம் செய்ய வேண்டும் என்றும் தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு உகந்த பொருட்களாக பல பொருட்கள் இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாக திகழ்வதுதான் எருக்குசெடி. எருக்கு செடியில் இருக்கக்கூடிய பூ, இலை, தண்டு, வேர் இவை அனைத்தும் பரிபூரண ஆகர்சன சக்தியை கொண்ட பொருட்களாக திகழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்துமே விநாயகப் பெருமானுக்கு உகந்த பொருளாக திகழ்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் எருக்கு இலையை எப்படி வசியம் செய்து நாம் நினைத்த நியாயமான காரியம் வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற பார்போம்.

முதலில் ஒரு எருக்கு இலையை பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலையை பறிப்பதற்கு முன்பாக மானசீகமாக எருக்குசெடியிடம் வேண்டிக் கொண்டு பிறகுதான் பறிக்க வேண்டும். பறித்த இந்த இலையை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு அந்த இலையின் மேல் சந்தனத்தை தடவ வேண்டும். பிறகு அந்த இலைக்கு நடுவில் விபூதியால் மூன்று கோடுகளை போட வேண்டும். அதாவது பட்டை அடிப்பது போல் போட வேண்டும். அடுத்ததாக அதற்கு நடுபட்டையில் குங்குமத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் அந்த பட்டைக்கு மேலும் கீழும் மூன்று குங்கும பொட்டை இலையின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் போது விநாயகப் பெருமானின் பெயரை உச்சரித்தவாறு வைக்க வேண்டும். அடுத்ததாக அந்த பட்டைக்கு நடுவில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும்.

இப்பொழுது இந்த இலையை விநாயகப் பெருமானுக்கு முன்பாக வைக்க வேண்டும். காம்பு இருக்கும் பகுதி விநாயகரை பார்த்த வாரும் நுனி இருக்கும் பகுதி நம்மை பார்த்து வாரும் வைத்துவிட்டு அந்த இலைக்கும் விநாயகருக்கும் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூறிவிட்டு “சித்த மூலிகை வசி வசி யாமி” என்று மூன்று முறை கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தோடு எருக்கு இலையை சதுரமாக மடித்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து வெளியில் செல்லும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வசிய பூஜையை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து வர நம்முடைய நியாயமான செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். எந்த இடத்திலும் பகை என்ற ஒன்று ஏற்படவே படாது.

இதையும் படிக்கலாமே: உக்கிர நரசிம்மர் வழிபாடு

விநாயகப் பெருமானின் அருளை பெற்ற இந்த இலையை விநாயகப் பெருமானே நம்முடன் இருப்பதாக கருதி வசியம் செய்து எடுத்துச் செல்வதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை தேடி வரும்.

- Advertisement -