உக்கிர நரசிம்மர் வழிபாடு

narasimmar
- Advertisement -

இந்த காலத்தில் யாரும் செய்வினை, சூனியம், மருந்து வைப்பது, வசியம் செய்வது போன்ற எதிர்மறை ஆற்றலை நம்புவது கிடையாது. இப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிர்மறை ஆற்றலால், கெட்ட சக்தியால் எந்த ஒரு பிரச்சனையும் வரப்போவது கிடையாது. ஆனால் மனது கொஞ்சம் பலவீனமாக இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் மூலம் அதிக பாதிப்பு வர வாய்ப்புகள் உள்ளது.

இந்த கலியுகத்தில் ஒருவரை மறைமுகமாக தாக்க வேண்டும் என்றால், வசியம் செய்வது, எதிராளி கெட்டுப் போக வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு எதிராக ஏதாவது தாந்த்ரீக பரிகாரங்களை செய்து, அடுத்தவர்களை வீழ்த்தி கஷ்டப்படுத்துவது போன்ற சில செயல்களில் சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

- Advertisement -

உங்களுக்கும் இனம் புரியாத ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறதா. திடீர் திடீரென்று உடம்பில் மாற்றங்கள் நிகழ்கிறதா. திடீர் திடீரென்று நீங்களே உங்களை அறியாமல் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறீர்களா. இதற்கு காரணம் ஏதோ ஒரு எதிர்மறை சக்தி என்று புரிந்து விட்டது. எத்தனையோ மருத்துவரை பார்த்தும் இதற்கான ஒரு விடை கிடைக்கவில்லை என்று திக்கி திணறுகிறீர்களா.

வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கொடுக்கக்கூடிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நரசிம்மர் வழிபாடு. நரசிம்மரை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் உங்களுக்கு இருக்கும் விடை தெரியாத கஷ்டத்திற்கும் பிரச்சனைக்கும், ஒரு விடை கிடைக்கும்.

- Advertisement -

கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்க நரசிம்மர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நரசிம்மரின் திரு உருவப்படம் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். சாந்தமாக இருக்கும் நரசிம்மரது படத்தையே வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உக்கிர நரசிம்மரை வீட்டில் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அதனால் தான். ஆனால் கெட்ட சக்தியை துவம்சம் செய்ய, நமக்கு உதவி செய்யப் போவது உக்கிர நரசிம்மர் தான்.

தினமும் நரசிம்மரின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நரசிம்மருக்கு பிரசாதமாக ஒரு வாழைப்பழம் அல்லது முந்திரி திராட்சை ஏதாவது ஒரு பிரசாதத்தை வைத்து விடுங்கள். அந்த நரசிம்மரை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு ‘ஓம் உக்கிர நரசிம்மாய நமஹ’ என்ற இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். இந்த கணக்கு ரொம்பவும் பெருசாக இருக்கலாம்.

- Advertisement -

ஆனால் தலைவிரித்து ஆடும் கண்ணுக்குத் தெரியாத பிரச்சனைகளை அடக்க இப்படிப்பட்ட சில வழிபாடுகளை நாம் செய்து தான் ஆக வேண்டும். முழு மனசோடு நரசிம்மரை மனதார நினைத்து இந்த வழிபாட்டை தினமும் செய்து வருபவர்களுக்கு உக்கிர நரசிம்மர் பாதுகாப்பு கவசமாக இருப்பார். உங்களை யாராவது தவறான பாதைக்கு எடுத்துச் செல்ல, தவறான கண்ணோட்டத்தோடு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகளை ஏவி விட்டால் கூட, அதிலிருந்து காப்பாற்ற அந்த உக்கிர நரசிம்மர் உங்களுக்கு வழியை காட்டிக் கொடுப்பார்.

இதேபோல தினமும் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். உங்களுக்கு வழி தெரியாத இனம் புரியாத கஷ்டம், உங்களை விட்டு தானாக விலகுவதை உணருவீர்கள். பிறகு மந்திரத்தை சொல்லக்கூடிய கணக்கை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். 1008 முறை மந்திரத்தைச் சொல்ல கொஞ்சம் சிரமம் இருக்கிறது எனும் பட்சத்தில், 108 முறை உக்கிர நரசிம்மரின் மந்திரத்தை சொல்லி இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் உங்களை எந்த கெட்ட சக்தியாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது.

இதையும் படிக்கலாமே: சொத்து தகராருக்கு உடனடியாக முடிவு கட்ட சிவன் வழிபாடு

அது மட்டுமல்லாமல் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்கள் உடம்பில் தங்கி உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தால் அந்த கெட்ட சக்திகளும் வெளியேறிடுவிடும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -