கணவன் மனைவி கையால் எறும்புக்கு இந்த பொருளை சாப்பிட போட்டால் ஆயுசுக்கும் உங்களுக்குள் சண்டையே வராது.

fight-vinayagar
- Advertisement -

மனிதர்களாக பிறப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த கணவன் மனைவி பிரச்சினை உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அந்த புராணக் கதைகள், இதிகாச கதைகளை பார்த்தால் இறைவனும் இந்த கணவன் மனைவி பிரச்சினையிலிருந்து தப்பிக்கவில்லை. அந்த இறைவன்  மனித அவதாரமாக எடுத்தாலும் கணவன் மனைவி பிரச்சனை தான். கைலாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன், திருமணம் செய்தாலும் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தான். இது இயல்பு. ஆகவே பிரச்சினைகள் வந்தாலும் கணவன் மனைவிக்குள் பிரிவு என்பது ஏற்படக் கூடாது. அதற்கு என்ன செய்வது. கணவன் மனைவி முதலில் ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற பேச்சுக்கு இடம் இருக்கக் கூடாது.

கடவுளாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் கணவன் மனைவி என்று வந்துவிட்டால் விதி ஒன்றுதான். யாராலும் தப்பிக்க முடியாது. சரி இந்த கணவன் மனைவி பிரச்சினையை சரி செய்ய ஒரு தாந்திரீக ரீதியான சின்ன பரிகாரத்தை இப்போது பார்க்க போகின்றோம்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்று வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதாற வேண்டிக்கொண்டு கணவன் மனைவி ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். ஒரு மஞ்சள் நிற சதுர வடிவில் இருக்கும் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மனைவி கையால் ஒரு கைப்பிடி வெள்ளை அவல், உங்களுடைய கணவரின் கையால் ஒரு கைப்பிடி வெள்ளை அவலை போட்டு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முடிச்சு பூஜை அறையில் இருக்கட்டும். எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு பூஜை செய்ய வேண்டும் என்று அவசியம் எல்லாம் கிடையாது. ஒரு வாரம் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

கணவன் மனைவி பிரிந்து இருந்து, யாருக்காவது ஒருவருக்கு சேர்ந்து வாழும் ஆசை இருந்தால் கூட உங்கள் கையாலேயே இரண்டு கைப்பிடி அவலை ஒன்றாக ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்கின்றார். ஆனால், அந்த கணவருக்கு மனைவியுடன் சேர்ந்து வாழக்கூடிய ஆசை உள்ளது என்றால், கணவரின் கையால் ஒரு கைப்பிடி அவல், மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். கணவரின் வாயால் மனைவியின் பெயரை மனதார மூன்று முறை சொல்லி ஒரு கைப்பிடி அவலை அதே மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏழு நாட்கள் கழித்து, அந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் அவலை கொண்டு போய் ஏதாவது மரத்தடியில் எறும்பு இருக்கக்கூடிய இடத்தில் போட்டுவிட்டு வந்து விடுங்கள். மரத்தடியில் நிச்சயமாக நிறைய எறும்பு இருக்கும்.

வாரம் ஒரு முறை மஞ்சள் துணைக்கு உள்ளே இருக்கக்கூடிய அவலை கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து கொண்டு போய் எறும்புகளுக்கு போட்டுவிட்டு வந்தால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். சண்டை சச்சரவுகள் குறையும். தனித்தனியாக பிரிந்து வாழக்கூடிய கணவன் மனைவி ஒன்றாக சேர வேண்டும் என்று, யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலும் கூட, பிரிந்திருக்கும் நீங்கள் சீக்கிரமே ஒன்று சேருவீர்கள். பரிகாரத்தை நிறுத்தாதீங்க. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிழமையில் முடிந்து வைத்திருக்கும் அவலைக் கொண்டு போய் எறும்புக்கு போடுங்க. புதியதாக அவளை முடிந்து வையுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நல்ல வாழ்க்கை உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

- Advertisement -