பிரச்சனைகளை விரட்டி அடிக்க ஈசன் பரிகாரம்

sivan1
- Advertisement -

யாருக்கு தாங்க பிரச்சனை இல்ல. இந்த பூமியில மனுஷனா பிறந்த ஒவ்வொருத்தருக்குமே ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. பிரச்சினைகளை கண்டு பயந்து ஒதுங்காமல், பிரச்சனையை ஒரு முறை திரும்பி பார்த்தாலே போதும். அந்த பிரச்சனை நம்மை கண்டு பயந்து ஓடிவிடும். நம்ம ஊர்ல எல்லாம் நாய்க்கு சொல்லுவாங்க இல்லையா.

நாயை கண்டு ஓடாத, திரும்பி பாரு அந்த நாய் உன்ன கண்டு ஓடிடும் அப்படின்னு. பிரச்சனையும் அதே போல தான். தூசு தட்டுவது போல உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளையும் தட்டி தூக்கிடலாமா. அதற்கான ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

பிரச்சனைகள் தீர ஈசன் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முதலில் நமக்கு தேவையான பொருள் 108 மிளகு. சின்ன கிண்ணத்தில் எண்ணி எடுத்து வச்சுக்கோங்க. பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள். மனதார ஈசனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் சிவனது திருவுருவப்படம் இருந்தால் இன்னும் சிறப்பு. நடராஜர் சிலை முன்பும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அண்ணாமலை ஈஸ்வர் முன்பும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எல்லாம் ஈசன் அவதாரம் தான்.

மனதில் அந்த ஈசனை நினைத்துக் கொள்ளுங்கள். கிண்ணத்தில் இருக்கும் ஒவ்வொரு மிளகாக உங்க கையில எடுங்க எடுத்து ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை சொல்லுங்க. ஒவ்வொரு முறை ஒவ்வொரு மிளகு எடுக்கும் போதும் ‘ஓம்’ சொல்லும் போதும், நன்றாக இழுத்து ஓஓஓஓம்ம்ம் என்ற அந்த ராகத்தோடு இந்த மந்திரத்தை, அடிவயிற்றில் இருந்து சொல்லி, அந்த மிளகை இன்னொரு கிண்ணத்தில் எடுத்து போட்டுக்கோங்க.

- Advertisement -

ஒவ்வொரு மிளகுக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி உரு ஏற்றி விட வேண்டும். இந்த 108 மிளகு உங்கள் பூஜை அறையில் இருந்தால் அந்த ஈசனே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருப்பதாக அர்த்தம். 11 மிளகை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு நிலை வாசல் படியில் கட்டி தொங்க விடுங்கள். வீட்டிற்குள் எந்த கெட்டதும் வராது.

எந்த ஒரு பிரச்சனையும் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். மனசு சரியில்ல. வீட்டில் ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது, நிம்மதி ஒரு துளி கூட இல்லை கணவன் சொல்வதை மனைவி பிரச்சனையும் ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கு அப்படிங்கற பட்சத்தில், பூஜை அறைக்கு போய் இந்த ஒரு மிளகை எடுத்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்து முழுங்கி விடுங்கள்.

- Advertisement -

அந்த பிரச்சனை சரியாகிவிடும். அப்படி என்றால், அந்த பிரச்சனையை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறுவதற்கான தெம்பு உங்களிடத்தில் வந்துவிடும். நல்ல காரியத்திற்காக வெளியே போறீங்க ஏதோ ஒரு முயற்சி செய்றீங்க. அந்த காரியத்தில் தடைகள் வரக்கூடாது எதிரியால் தொல்லை வரக்கூடாது. அந்த நல்ல காரியம் உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடிய வேண்டுமா.

காலையில் எழுந்து குளித்துவிட்டு கொஞ்சம் திருநீங நெற்றியில் பூசி, ஈஸ்வரா என்று நினைத்து ஒரு மிளகு வாயில் எடுத்துபோட்டு வெளியில் கிளம்பினார் உங்களுடைய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இப்படி வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரச்சனையின் வரப்போகுது, பிரச்சினை வந்திருச்சு, என்று தெரிந்தவுடன் ஈசனை நினைத்து ஒரு மிளகை சாப்பிடுங்க போதும்.

பிரச்சனைகள் எல்லாம் தூசு போல பறந்து ஓடும். அந்த ஒவ்வொரு மிளகும் ஈசனின் அம்சம் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்யணும். உங்க குழந்தை தேர்வு எழுதப் போறாங்களா. ஒரு மிளகை அவங்க வாயில போட்டு தண்ணீர் ஊற்றி குடிக்க சொல்லிட்டு போக சொல்லுங்க. தேர்வை பயமில்லாமல் எழுதுவார்கள். ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம் இது.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்

சிவன் பக்தர்களுக்கு இதை விட வர பிரசாதமாக வேறு ஒரு பரிகாரம் கிடைக்கவே கிடைக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றும்போது பிரச்சனைகளை தூசு போல தட்டும் தைரியம் தானாக வந்துவிடும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -