பணவரவு அதிகரிக்க ஏகாதசி மந்திரம்

perumal manthiram
- Advertisement -

ஒவ்வொரு தெய்வங்களின் வழிபாடுகளிலும் திதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த திதிகளை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து வழிபாடு முறைகளும் கணிக்கப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஏகாதசி திதி. ஏகாதசி என்பது 11 என்ற எண்ணைக் குறிக்கிறது. அதாவது அமாவாசைக்கு பிறகு வரும் 11ஆவது நாள் வளர்பிறை ஏகாதிசியாகவும், பௌர்ணமிக்கு பிறகு வரும் 11 வது நாள் தேய்பிறை ஏகாதசி திதியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஏகாதிசி திதியானது பெருமாளுக்கு உரியது. பெருமாளை வழிபடுபவர்கள் இந்த ஏகாதசி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்த அனைத்து செல்வ நலன்களையும் பெறுவதோடு பாவங்களையும் போக்கும் சொல்லப்படுகிறது. அப்படி யான ஏகாதசி திதியில் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்க சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பண வரவிற்கு ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ஏகாதிசி திதியன்று விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து விரதத்தை தொடங்கி விட வேண்டும். இப்படி விரதம் இருப்பவர்கள் முதல் நாள் இரவே உணவு தவிர்த்து விடுவது நல்லது. இந்த விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருங்கள்.

அடுத்து அன்றைய தினத்தில் காலையிலே பெருமாள் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து துளசி இலை மாலை கட்டி போட்டு விடுங்கள். மகாலட்சுமி தாயார் படம் இருப்பின் அவருக்கும் இதே போன்று செய்யுங்கள். அதே போல் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக பானகம் கரைத்து வைத்து வழிபாடு செய்யுங்கள். இது அவருக்கு மிகவும் உகந்த நெய்வேத்தியம்.

- Advertisement -

அடுத்து பெருமாள் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய பணத் தேவைகள் பண பிரச்சனைகள் மட்டுமின்றி உங்களுடைய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர வேண்டும் என்று பெருமாளை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அத்துடன் கீழ் வரும் மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்

என்ற இந்த மந்திரத்தை பூஜையின் போது 11 முறை சொல்லுங்கள். அதன் பிறகு பூஜையை நிறைவு செய்து நெய்வேத்தியமாக வைத்த பானகத்தை அருந்தி அன்றைய நாள் முழுவதும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்

- Advertisement -

இத்துடன் நாளைய நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். இந்த மந்திரத்தை வாகனங்களில் பயணம் செய்யும் போது சொல்லக் கூடாது. அதே போல் பெண்கள் மாதவிலக்கான நேரத்தில் சொல்லக் கூடாது.

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் எங்கிருந்தாலும் பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். நாளைய தினம் இந்த ஒரு மந்திரத்தை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கும் போது பெருமாளின் பரிபூரண அனுகிரகம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வறுமையை நீக்கும் சிவ மந்திரம்

அது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரோடு நம் இல்லம் தேடி வந்து நம்முடைய பணப்பிரச்சனை தீர்த்து செல்வ வளத்துடன் வாழ வைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நாளைய தினம் இந்த மந்திர வழிபாட்டு முறையை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -