குபேரரின் அருள் பார்வை நேரடியாக உங்கள் மீது பட்டு, நீங்கள் செல்வ செழிப்புடன் வாழ உருளியில் இருக்கும் தண்ணீரில் இதை மட்டும் கலந்து விட்டால் போதும்.

kubera uruli
- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்றால் அந்த வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்து, செல்வ செழிப்புடன் நோயற்ற வாழ்வு வாழ்ந்தால் தான் முடியும். அப்படி ஒரு வீடு அமைய வேண்டும் என்றால் அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் மேலோங்கி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்யாவும் நீங்கி, நேர்மறை ஆற்றல் தோன்றி வீட்டில் இருப்பவர்கள் செல்வ செழிப்புடன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லோருமே செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் அங்கு நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் மேலோங்கி வீட்டில் இருப்பவர்கள் நல்ல முறையில் உழைத்து முன்னேற வேண்டும். இவையெல்லாம் சரிவர நடக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி எப்போதும் நேர்மறை ஆற்றல் இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருளும், குபேரரின் பார்வையும் இருந்தால் இப்படியான ஒரு வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களின் பரிபூரண அருளைப் பெற இந்தப் பொருளை உருளியில் சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் உருளியில் தண்ணீர் ஊற்றி மலர்கள் போட்டு வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி வைப்பதற்கு காரணம் வீட்டை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை தரவே. இதற்காக வைக்கும் தண்ணீரில் நாம் சேர்க்கும் சில பொருள் மூலம் எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக நீங்குவதுடன, குபேரரின் நேரடி பார்வை கிடைத்து செல்வ செழிப்புடன் வாழவும் இது வழி செய்யும்.

எதிர்மறை ஆற்றல் நீங்க பரிகாரம்
இந்த உருளியில் நாம் சேர்க்க வேண்டிய அந்த பொருள் மல்லிகை பூ. உருளியில் எப்பொழுதும் நாம் பூ வைக்க தான் செய்வோம். அந்த பூ மல்லிகை மலராக இருக்கும் போது அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி மல்லிகை மனம் என்பது அனைத்து நல்ல ஆற்றலையும் ஈர்த்து நமக்குத் தரும் என்று சொல்லப்படுகிறது. அந்தத் தண்ணீரில் நாம் சேர்க்க வேண்டிய இன்னும் இரண்டு முக்கியமான பொருள்கள் புதினா, சீரகம். மல்லிகையுடன் இந்த புதினாவும், சீரகமும் சேர்ந்து தண்ணீரில் இருக்கும் போது அங்கு குபேரரின் நேரடி பார்வை கிடைத்து அனைத்து எதிர்மறை ஆற்றலும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

உருளியில் இந்தப் பொருட்களை சேர்த்து வைக்கும் போது வீட்டில் உள்ளவர்களின் மனநிலையும் கூட நல்லபடியாக மாறி நோய் நொடி இன்றி வாழவும் இந்த பரிகார முறை உதவும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குங்குமம் கீழே கொட்டி விட்டால் பயப்படாமல் உடனே இதை செய்து விட்டால் போதும். எந்த ஆபத்தும் உங்கள் குடும்பத்தை நெருங்காமல் தடுத்து விடலாம்.

இந்த உருளியை வரவேற்பறையில் வைத்தால் மிகவும் நல்லது. இது போல எதிர்மறை ஆற்றலை நீக்க எந்த பொருளையும் வைத்தாலும், அதை பலரும் பார்க்கும் வண்ணம் வைத்தால் நல்லது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -