உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

fire
- Advertisement -

வாரம் முழுவதும் நேரமில்லாமல் ஓடி ஓடி உழைக்கின்றோம். பல பேருடைய கண்கள் நம்மேல் விழுகிறது. கண்ணுக்குத் தெரியாத பல எதிர்மறை ஆற்றலை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. இதன் மூலம் நம்முடைய உடம்பு, மனசு, நம்மை சுற்றி இருக்கும் ஆராசக்தி, இவைகள் அனைத்துமே பலவீனம் அடைந்து, அதனுடைய நல்ல சக்திகளை இழக்கச் செய்யும்.

இவைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்மை நாமே கிளன்சிங் செய்து கொள்ள வேண்டும் அல்லவா. அதாவது நம் உடம்பையும் மனதையும் நம்மை சுற்றி இருக்கும் ஆரா சக்தியையும் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் பெரிய அளவில் வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

- Advertisement -

வாரம் முழுவதும் உடம்பில் சேர்த்து வைத்த நெகடிவ் எனர்ஜி, மனசில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி, இவைகளை போக்க, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று என்ன பரிகாரம் செய்வது. கிழமைகளில் வார தொடக்க நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், நமக்கு வாரத்தின் இறுதி நாள் ஞாயிறு தானே. சரி, இப்போது பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடிக்க ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பிறகு, நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்யணும். வீட்டிற்கு வெளியே இடம் இருந்தால் செய்யலாம், அல்லது வரவேற்பு அறையிலும் பரிகாரத்தை செய்து கொள்ளலாம் தவறில்லை. தீக்குச்சிகள் எடுத்துக் கொள்ளுங்கள். 9 என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த குச்சிகளை மொத்தமாக உங்களுடைய வலது கையில் வைத்து உங்களுடைய தலையை 11 முறை சுற்ற வேண்டும்.

- Advertisement -

இடமிருந்து வளமாக அதாவது ஆன்டி கிளாக் வைஸ் உங்களுடைய தலையை சுற்றி, இந்த தீக்குச்சியை அப்படியே ஒரு மண் அகல் விளக்கில் வையுங்கள். இதில் ஒரு கற்பூரத்தை வைத்து அப்படியே நெருப்பு பற்ற வைத்து விட வேண்டும். 9 தீக்குச்சிகளை மொத்தமாக வைத்து, ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து, அப்படியே நெருப்பை மூட்டும்போது உங்கள் உடம்பில் இருக்கும் அத்தனை நெகட்டிவ் எனர்ஜியும் நெருப்பில் பொசுங்கியது என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

கற்பூரம் எரிந்து முடிந்ததும் கை கால் முகத்தை அலம்பி விட்டு தூங்கச் செல்லுங்கள். திங்கட்கிழமை காலை புத்தம் புது நல்ல ஆற்றலோடு எழுந்து வேலையை தொடங்கி பாருங்கள். உங்களுடைய அந்த வாரம் சூப்பராக இருக்கும். உடம்பில் இருக்கும் நெகடிவ் எனர்ஜி எல்லாம் வெளியேறி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெற வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் சூட்சமம்

ஆரா புதுப்பிக்கப்படும். ஜாலியா வாரத்தின் முதல் நாளை தொடங்கி, அதே சந்தோஷத்தோடு அடுத்த ஆறு நாட்களையும் கழிப்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்களேன். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -