செல்வ வளம் பெற வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் சூட்சமம்

vilakku1
- Advertisement -

பெரும்பாலும் இந்து கடவுளை வழிபாடு செய்பவர்கள் எல்லோர் வீட்டிலும் இந்த காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும், அல்லது கெஜலட்சுமி விளக்கு இருக்கும். பூஜை அறையில் இந்த விளக்கை ஏதோ ஒரு உலோகத்தில் வைத்து வழிபாடு செய்வார்கள். அது பஞ்சலோக உலகத்தில் செய்த காமாட்சி அம்மன் விளக்காக இருக்கட்டும், அல்லது வெள்ளியில் செய்ததாக இருக்கட்டும், பித்தளையில் செய்ததாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும்.

இந்த விளக்கை ஏற்றக்கூடிய சூட்சமம் என்று ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் பின்பற்றினாலே போதும். உங்கள் குடும்பம் என்றும் ஏறுமுகத்தில் செல்லும். வீடு செல்வ செழிப்போடு செழிப்பாக இருக்கும். வீட்டில் வறுமையே தங்காது. பெண்கள் மனதில் நினைத்து, கேட்ட வரங்களை உடனடியாக அந்த காமாட்சியம்மன் நிறைவேற்றி வைப்பாள். அந்த சூட்சமமான வழிபாட்டு முறை என்ன. தெரிந்துகொள்ள ஆரம்பம் உள்ளவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

நல்லது நடக்க காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் சூட்சமமான முறை

காமாட்சி அம்மன் விளக்கை ஒரு முக்காலியில் வைத்து ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதுவும் கருங்காலியால் செய்யப்பட்ட முக்காலியை வாங்கி வைத்து அதன் மேலே, கொஞ்சமாக பச்சரிசி வைத்து அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைத்து நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

சில மரத்திற்கு அதிக உயிரோட்டம் இருக்குது அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது எல்லா மரத்துக்கும் உயிர் இருந்தாலும், சில மரங்களுக்கு இந்த பவர் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் இன்று நாம் கருங்காலி மாலையை பற்றி நிறைய இடங்களில் பேசுகின்றோம், பார்க்கின்றோம். நிறைய பிரபலங்கள் கூட இதை அணிந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த காலத்தில் இருந்து வந்த கருங்காலி தான். ஆனால் இடையில் மறைந்து போனோம். இப்போது மறுபடி அதை நினைவுக்கு வந்திருக்கிறது. சரி, இப்போது அது பிரச்சனை இல்லை. இந்த கருங்காலி கட்டையை நம் வீட்டில் வைத்தால் நம்முடைய பூஜை அறையிலும் இறை சக்தியானது ஈர்க்கப்படும்.

நம் வீட்டில் இறை சக்தி உயிர் பெறும். அது மட்டும் அல்லாமல், காமாட்சியம்மன் விளக்கை வீட்டுப் பெண்கள் ஏற்றும் போது உங்களுக்கு தேவையான வேண்டுதலை மனதில் சொல்லிக் கொண்டு, அந்த விளக்கை ஏற்ற வேண்டும். தினமும் அந்த வேண்டுதலை சொல்லிக்கொண்டே விளக்கை ஏற்றி பாருங்கள். 48 நாட்களில் நீங்கள் வேண்டிய வேண்டுதலை அந்த காமாட்சி அம்மன் நிறைவேற்றி வைப்பாள். இது நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே: மன நிம்மதி தரும் தீர்த்தம்

முடிந்தவர்கள் காமாட்சியம்மன் விளக்கை இப்படி கருங்காலி முக்காலியில் வைத்து ஏற்றுங்கள். அதெல்லாம் ரொம்பவும் விலை அதிகம் என்பவர்கள், பித்தளை தட்டியின் மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைத்து வேண்டுதலை சொல்லிக் கொண்டே விளக்கு ஏற்றுங்கள். உங்களுக்கும் நிச்சயம் வேண்டுதல் பலிக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -