எதிரிகள் விடும் சாபத்திலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் வசம்பு மை.

enemy
- Advertisement -

போட்டி பொறாமைகள் நிறைந்த உலகத்தில் தான் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கின்றோம். நண்பர்களாக இருந்தாலும், சொந்தபந்தங்கள் ஆக இருந்தாலும், உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் வரும்போது, தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணப் பிரச்சினை வரும்போது நண்பர்களும் சொந்த பந்தங்களும் நமக்கு எதிரியாக மாறி விடுகிறார்கள். ஒருவருடைய தோல்வியில் தான், இன்னொருவரின் வெற்றி அடங்கி உள்ளது. தோல்வி அடைந்தவன், வெற்றி அடைந்தவனை நிச்சயமாக எதிராளியாகத்தான் இந்த உலகத்தில் பார்க்கின்றான். இப்படி இருக்கும்போது எதிரி இல்லாத ஒரு மனிதன் இந்த பூமியில் இருக்கவே முடியாது.

enemy

கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சமாளிக்க தாந்திரீக ரீதியாக நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எதிரியின் சாபம், எதிராளியின் வயித்தெரிச்சல் எதிராளியால் ஏவி விடப்படும் எதிர்மறை ஆற்றல்கள், இதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது.

- Advertisement -

வசிய சக்தி நிறைந்தது வசம்பு. எந்த ஒரு விஷயத்தையும் வசம்பை வைத்து நம் வசியப்படுத்தி கொள்ளலாம். அந்த வரிசையில் எதிராளியையும் வசியப்படுத்தும் தன்மைகொண்ட வசம்பு மை எப்படி தயார் செய்வது. தயார் செய்த மையை எப்படி பயன்படுத்துவது.

vasambu

முதலில் ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளலாம். திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். வசம்பை இந்த தீப ஒளியில் காட்டி நன்றாக கருவி சாம்பலாக்கி விடவேண்டும். இந்த சாம்பலை ஒரு சிறிய டப்பாவில் போட்டு அதில் சுத்தமான நெய் ஊற்றி குழைத்து வைத்தால் வசம்பு மை தயார்.

- Advertisement -

இந்த மையை தயார் செய்து பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு மோதிர விரலால் இந்த வசம்பு மாயை தொட்டு உச்சந்தலையில் ஒரு சொட்டு, நெற்றிப்பொட்டில் ஒரு சொட்டு, இரண்டு உள்ளங்காலில் ஒவ்வொரு சொட்டு, வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணுக்கே தெரியாமல் லேசாக பூசிக் கொண்டால் போதும்.

sabam

தினம்தோறும் இந்த வசம்பு மையை இட்டுக்கொண்டு நாம் வெளியே சென்றால் எதிராளிகளின் சாபமும் எதிராளிகளின் வயிற்றெரிச்சல், எதிராளியின் கண் திருஷ்டி, பொறாமை குணமும் நம்மை எதுவுமே செய்ய முடியாது. நாம் ஒரு பாதுகாப்பு வட்டத்தில் இருப்போம். நம்மிடம் வரக்கூடிய எதிர்மறை ஆற்றல் கூட, நம்மிடம் வசமாகி நமக்கு நன்மை தரக்கூடிய நேர்மறை ஆற்றல் ஆகவே மாறிவிடும். எதிர்மறை ஆற்றலையும் நேர்மறை ஆற்றலாக மாற்றக் கூடிய சக்தி கொண்டது தான் இந்த வசம்பு மை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எதிரிகளால் எந்த ஒரு பாதிப்பும் பெரிய அளவில் ஏற்படாது.

- Advertisement -