கூடவே இருந்து குழி பறிக்கும் எதிரியை ஓட ஓட விரட்ட, சிறிய துண்டு பெருங்காயம் போதும்.

enemey
- Advertisement -

எதிரி என்பவன் தூரத்தில் இருப்பவன் அல்ல. நம் அருகிலேயே நம் நண்பர்களாகவும், நம் உறவினர்களாகவும், நம்முடன் வேலை செய்பவர்களாகவும் இருப்பவர்கள்தான். இப்படி நம்மை சுற்றி இருக்கும் சிலர் நம் முன்னேற்றத்தை பார்த்து பொறாமை பட்டு நம்மை அறியாமலேயே நமக்கு எதிரியாக மாறி விடுவார்கள். நம் கூடவே இருந்து நமக்கு பின்னால் குழிதோண்டும் நபர், இவர்தான் என்று ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே தெரிந்து விடும். இருப்பினும் நம் உடன் இருப்பவரை நம் நண்பர்களை நம் சொந்தக் காரர்களை நம்மால் நேரடியாக எதுவுமே சொல்ல முடியாது.

enemy1

அதாவது சகுனியை பக்கத்தில் வைத்துக் கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சில கஷ்டத்தை நாம் அனுபவித்து வருவோம். உங்களுடன் இருக்கும் பசுத்தோல் போர்த்திய புலி யை உங்களிடம் இருந்து கழட்டி விடுவது எப்படி என்பதற்கான விடையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நமக்கு நேரெதிராக நின்று சண்டை போடும் எதிரியை கூட நாம் சமாளித்து விடலாம். ஆனால் நம்முடனே இருந்து, நமக்கு நல்லது செய்வது போல, தந்திரமாக குள்ள நரி வேலையை பார்ப்பவர்களை, தந்திரத்தால் தான் தோற்கடிக்க முடியும். அந்த வரிசையில் ஒரு தந்திரமான தாந்திரீக ரீதியான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோமா.

perungayam

ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் விநாயகரையும் மனதார நினைத்துக்கொண்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்களுடைய எதிரியின் பெயரை எழுதி, அந்த சிறிய டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். அந்த டப்பாவுக்குள் பெருங்காயத் துண்டு வென்கடுகு போட்டு ஒரு மூடி போட்டு மூடிவிடுங்கள்.

- Advertisement -

பெருங்காயத்தை டப்பாவுக்குள் போடுவதற்கு முன்பு அந்த பெருங்காயத்தை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து, குறிப்பிட்ட இந்த எதிரி, எதிரியின் பெயரை உச்சரித்து, ‘எனக்கு எதிராக செயல்படும் அந்த குறிப்பிட்ட நபர் இனி என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட கூடாது. என்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது.’ என்று வேண்டிக் கொண்டு பெருங்காயத்தை டப்பாவுக்குள் போட்டு கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

venkadugu

ஏதாவது ஒரு கைக்கு எட்டாத தூரத்தில் அந்த டப்பாவை வைத்துவிடுங்கள். இந்த டப்பா 48 நாட்கள் அப்படியே உங்களுடைய வீட்டில் இருக்கட்டும். இந்த டப்பாவினை தயார் செய்து வைத்த ஒரு சில நாட்களிலேயே உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் எதிரி, உங்களை விட்டு விலகி செல்வதை உங்களால் நிச்சயமாக உணர முடியும். உங்களுடைய எதிரி, உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான பரிகாரம் தான் இது.

enemy

இந்த பரிகாரத்தை செய்து விட்டால் எதிரிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றும் வருத்தப்பட வேண்டாம். எதிரியின் உயிருக்கும், எதிரியின் முன்னேற்றத்திற்கு எந்த ஆபத்தும் வராது. எதிரிக்கே உங்களைப் பற்றிய எண்ணம் மறக்க தொடங்கும். உங்கள் விஷயங்களில் அவர்கள் தலையிட மாட்டார்கள். உங்களுடன் ஏதோ ஒரு வகையில் பிரிவினை ஏற்பட்டு, தானாகவே உங்களை விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு இந்த தாந்த்ரீக ரீதியான பரிகாரத்தை செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -