இந்த செடியை உங்கள் கையால் வீட்டில் நட்டு வளர்த்து வந்தால், எதிரிகளை சுலபமாக ஜெயித்து விடலாம். எதிரி மீது இருக்கும் பயம் கூட பஞ்சாக பறந்து விடும்.

bairavar
- Advertisement -

பொதுவாகவே நம்மை எதிர்க்கக்கூடிய எதிரியை பார்க்கும் போது, வெளியில் நாம் பயத்தை காட்டிக் கொள்ளவதில்லை என்றாலும், அடி மனதில் ஒரு பயம், உள்ளுக்குள்ளே இருக்கத்தான் செய்யும். இந்த எதிரியின் மூலம் நமக்கு என்ன பிரச்சனை வருமோ என்று. அப்படிப்பட்ட மன பயம் கூட நமக்கு வராது. இந்த இரண்டு செடிகளை உங்கள் கையால், உங்கள் வீட்டிற்கு முன்பாக நட்பு வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வந்தால். அப்படிப்பட்ட அற்புதமாய்ந்த இரண்டு செடிகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் சண்டை, தொழிலில் எதிரி, உறவினர்களில் எதிரி, கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரி, இப்படி எல்லா எதிரிகளையும் சமாளிக்க இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

எதிரிகளை வெல்ல வளர்க்க வேண்டிய செடிகள்:
அது எந்தெந்த செடிகள் என்று முதலில் பார்த்து விடுவோம். இஞ்சி செடி, மருதாணி செடி, இந்த இரண்டு செடிகளை சிறிய அளவில் இருக்கும் தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றி, எதிரி தொல்லை நீங்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்தாலே உங்களுடைய எதிரிகளால் பெரிய அளவில் பிரச்சனை வராது.

- Advertisement -

சில எதிரிகளை நம்மால் சமாளிக்கவே முடியாது. என்னதான் ஒதுங்கிப் போனாலும் நம்முடைய தொழிலை கெடுக்கவே வருவார்கள். சில அலுவலகங்களில், நம் உடன் வேலை செய்பவர்களே, நாம் செய்யும் வேலையை பார்த்து, பொறாமைப்பட்டு நம் முன்னேற்றத்தை தடுக்கவே நம்முடன் நட்புறவோடு இருக்கும் சில எதிரிகளும் இருக்கிறார்கள். இந்த எதிரிகள் ஒரு படி மேலே போய் துரோகிகளாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.

சில நண்பர்கள், சில உறவினர்கள், பெரிய அளவில் நமக்கு எதிரிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து எல்லாம் தப்பிப்பதற்கு, இந்த இரண்டு செடிகளை வளர்த்து, வெளியில் செல்லும்போது இந்த செடிகளை பார்த்து விட்டு செல்லுங்கள். நிச்சயமாக உங்களுக்கு எதிரியின் மூலம் எந்த தொந்தரவும் இருக்காது.

- Advertisement -

ஒரு மீட்டிங் அட்டென் செய்ய வேண்டும் என்று போறீங்க. அங்க உங்களுக்கு முன்னாடி அமர்ந்திருக்கும் 10 பேரும் உங்கள் எதிரிகள் தான். அவர்களை சமாளிக்க இந்த இஞ்சியின் வேர் சிறிதளவு, மருதாணி செடியின் வேர் சிறிதளவு கையில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். எதிரியை சுலபமாக சமாளிக்க கூடிய மன தைரியம் உங்களுக்கு வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டத்தில் சறுக்கி, வறுமையில் விழுந்தவனை கூட கை கொடுத்து தூக்கி விடும், மகா சக்தி வாய்ந்த குபேர மந்திரம்.

எதிரிகளை சமாளிக்க நமக்கு ஒரு தெம்பு தேவையல்லவா. அது ஒரு இறைவழிபாட்டின் மூலம் நமக்கு கிடைக்கும். அது எந்த இறை வழிபாடு தெரியுமா. பைரவர். கால பைரவரை நாம் தேய்பிறை அஷ்டமி அன்று சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். ஆனால் வளர்பிறையில் வரும் அஷ்டமியில் கால பைரவர் கோவிலுக்கு சென்று சிவப்பு அரளிப்பூ வாங்கி கொடுத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்தால், எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி நம்மிடத்தில் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -