உங்களை கடனாளியாக மாற்ற வேண்டும் என்று, எதிரிகள் சூழ்ச்சி செய்கிறார்களா? உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்க 1 வெற்றிலை போதும்.

enemy1
- Advertisement -

மனிதர்களுக்கு கஷ்டம் வருவதற்கு முதல் காரணம், இன்னொரு மனிதரின் வயிற்றெரிச்சலும் பொறாமை குணமும் கொடூர பார்வையும் தான். மனிதர்களாக பிறந்து விட்டால் கட்டாயமாக அவர்களுக்குள் பொறாமை குணம் இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவுதான் தான் நன்றாக வாழ்ந்தாலும், அடுத்தவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்க்கும் போது தனக்குள் சின்னதாக ஒரு ஏக்கம் வரும். நம்மால் இவனைப் போல் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்று. அந்த ஏக்கம் தான் கண் திருஷ்டியாக மாறுகின்றது. இந்த கண் திருஷ்டி பொறாமை குணமாக மாறுகிறது.

enemy1

எடுத்துக்காட்டுக்கு குறிப்பிட்ட இரண்டு பேருக்கு பிரச்சனை என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் மற்றொருவரை எதிராளியாக முடிவு செய்து விட்டார்கள். தன்னுடைய எதிராளி நன்றாக வாழ விடக்கூடாது என்று அவர்களை கடனாளியாக மாற்ற, அவர்களுடைய தொழிலை முடக்கிப் போட, அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க கூடாது என்று சில விஷயங்களை செய்து விடுவார்கள்.

- Advertisement -

இதைத் தான் நம்முடைய வழக்கத்தில் ஏவல் பில்லி சூனியம் செய்வினை வைத்து விட்டதாகவும் சொல்லுகின்றோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உங்களுடைய எதிராளிகள், நீங்கள் வாழவே கூடாது என்று உங்களுக்கு எதிராக சில விஷயங்களை செய்தால் எதிராளியின் கண்பார்வையில் இருந்து உங்களை நீங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது. எதிராளிகள் ஏவிவிட்ட எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bad-energy

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, சனிக்கிழமை, இந்த மூன்று நாட்களில் எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். மாலை ஏழு மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். உங்களுடைய வீட்டில் பூஜை அறை தவிர மற்ற வேறு ஏதாவது ஒரு இடத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சுத்தமான வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல தண்ணீரில் அந்த வெற்றிலையை கழுவி விடுங்கள். அப்போது அந்த வெற்றிலை கொஞ்சம் ஈரமாக இருக்கும். ஒன்பது மிளகுகளை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகு தான். அந்த மிளகை ஒரு இடுகையில் போட்டு நன்றாக தூள்செய்து வைத்துக் கொள்ளுங்கள். தூள் செய்த மிளகை, இந்த வெற்றிலையின் மேலே தூவி வெற்றிலையை நான்காக மடித்து உங்களுடைய உள்ளம் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

vetrilai

உள்ளம் கையில் இருக்கும் வெற்றிலையை முதலில் உச்சந்தலையில் வைக்க வேண்டும். உச்சந்தலையில் வைத்துக் கொண்டு ‘ஓம் ரீங் நசி மசி’ என்ற மந்திரத்தை 36 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு அதே வெற்றிலையை எடுத்து உங்களுடைய வயிற்றில் தொப்புள் பகுதியில் வைத்து, இந்த மந்திரத்தை 36 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பின்பு, அதே வெற்றிலையை உங்களுடைய கால் பாதங்களில் வைத்து 36 முறை இதே மந்திரத்தை உச்சரித்து, அந்த வெற்றிலையை ஒரு பேப்பரிலோ ஒரு கவரிலோ போட்டு மடித்து உங்கள் வீட்டில் இருந்து கண்ணுக்கு தெரியாமல் தூரமாக ஒதுக்குப்புறமாக கொண்டுபோய் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து முகம் கை கால்களை அலம்பி கொள்ள வேண்டும்.

vetrilai

அவ்வளவு தான் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எதிரிகளின் மூலம் இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு விமோசனம் கிடைத்து விடும். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்தால், அந்த வெற்றிலையை நன்றாக கவரில் சுருட்டி, உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு போய் தூரமாக போட்டு விட்டு வர சொல்லலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -