எதிரிகளை அடக்கும் சாம்பல் தயார் செய்யும் முறை

tharpai
- Advertisement -

எதிரிகளை போட்டி போட்டு வெல்ல வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் திறமை மட்டுமே போதாது. அதையும் தாண்டி சில சூட்சமமான வித்தைகளை கையாள வேண்டும். மாயை சூழ்ந்திருக்கும் இந்த உலகத்தில் கண் கட்டி வித்தைகள் ஏராளமாக இருக்கிறது. ஏமாற்று வேலைகள் ஏராளமாக இருக்கிறது.

யாரை எப்படி அடித்து கீழே சாய்த்து விட்டு, நாம் மேலே ஏறி வரலாம் என்று தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட உலகத்தில் நாமும் வாழ வேண்டும் என்றால், சில சூட்சமங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் நம்முடைய எதிரிகளை நாம் அழிக்கப் போவதில்லை. எதிரியின் தொல்லையிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளப் போகின்றோம். அதுக்கு ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

எதிரியை சமாளிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் தர்ப்பைப்புல், வெற்றிலை, இரண்டு மட்டும்தான். இந்த இரண்டுமே சுலபமாக கிடைக்கக் கூடியது. இதை வாங்க நிறைய காசு செலவு செய்ய தேவை இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். குலதெய்வத்தை நினைச்சுக்கோங்க. எதிரி உங்கள் பக்கம் வரக்கூடாது.

எதிரியால் தொல்லை இருக்கக் கூடாது, என்ற பிரார்த்தனை செய்து கொண்டு கொஞ்சமாக நெய்யை எடுத்து, அந்த தர்ப்பை புல்லில் தடவுங்கள். மண் அகல் விளக்கு ஏத்திக்கோங்க. நெய் விட்டு திரி போட்டு மண் அகல் விளக்கு எரியட்டும். நெய்யில் நனைத்து வைத்திருக்கும் இந்த தர்ப்பை புல்லை அந்த அகல் விளக்கு நெருப்பில் காட்டினால், அப்படியே பொசுங்கும். கருப்பு நிறத்தில் சாம்பல் நமக்கு கிடைக்கும். அதை அப்படியே பத்திரமாக சேகரித்து ஒரு வெற்றிலையில் வையுங்கள்.

- Advertisement -

சாம்பல் பறக்கும் காய்ந்திருந்தால். அதனால் அதன் மேலே ஒரு சொட்டு நெய்யை வைத்து அந்த வெற்றிலையில் தடவி விடுங்கள். இப்போது வெற்றிலைக்கு மேலே கருப்பு நிற சாம்பல் இருக்குது. இது மை போல இருக்கும். இந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி நூல் போட்டு கட்டி உங்கள் பர்ஸ், பேக், ஹேன்ட் பேக் எதில் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பாக்கெட்டிலும் இதை வைக்கலாம். ஆனால் ஒரு கவரில் போட்டு வச்சுக்கோங்க அந்த கருப்பு மை ட்ரெஸ்ஸில் ஆகாமல் இருக்கும்.

ஆண்களுக்கும் இந்த உலகத்தில் எதிரி இருக்கிறார்கள். பெண்களுக்கும் இருக்கிறார்கள். ஆகவே ஆண் பெண் இருவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும். பழைய வீட்டிலேயே எடுத்து கால் படாத செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு புது வெற்றிலை தயார் செய்யவும்.

- Advertisement -

இந்த வெற்றிலை உங்களுடைய கையில் இருந்தால் எதிரிகளால் உங்களை வீழ்த்த முடியாது. சில பேர் எல்லாம் தொல்லை கொடுக்க காத்துக் கொண்டே இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில், நம்மை முன்னேற விட மாட்டான். தொழிலில் முன்னேற விடமாட்டான். நம்மைப் பற்றி புறம் பேசிக்கொண்டே இருப்பார்கள். நம்மைப் பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி சமுதாயத்தில் நம் பேரை கெடுத்து வைப்பார்கள். இதை நம்ப நாலு பேர் இருப்பாங்க.

நாலு பேர் 40 பேரிடம் சொல்லி, நம்முடைய வாழ்க்கையை அழித்து விடுவார்கள். இப்படிப்பட்ட தொந்தரவு உள்ளவர்கள் இந்த தர்ப்பை புல் மை தடவிய வெற்றிலையை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். உங்களைப் பற்றி புறம் பேசும் எதிரி உங்களைப் பற்றி நினைப்பதை கூட நிறுத்தி விடுவான்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் துயரங்கள் தீர விருட்ச வழிபாடு

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரி உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டான். முயற்சி செய்து பாருங்கள். இரண்டே வாரத்தில் ரிசல்ட்டை கண்கூடாக பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் தாந்திரீகம் சார்ந்த, ஆன்மீக சொல்லும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பலன் பெறலாம்.

- Advertisement -