துன்பங்கள் துயரங்கள் தீர விருட்ச வழிபாடு

Pray Sivan
- Advertisement -

கஷ்டம் என்பது யாருக்குத் தான் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத் தான் செய்யும் இது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால் சில நேரங்களில் நமக்கு நேரும் துன்பங்கள் வெலியில் கூட நம்மால் சொல்ல முடியாது அளவிற்கு இருக்கும். அது எந்த மாதிரியான பிரச்சினையாக இருந்தாலும் இறைவனிடத்தில் நிச்சயமாக சொல்வோம். அப்படி நம்முடைய துன்பத்தை சொல்லும் போது ஓடி வந்து காக்கும் தந்தையாக இருப்பவர் சிவபெருமான்.

இவரை நினைத்து சரணாகதி அடைந்து நம்முடைய துயரத்தை அவர் பாதங்களில் வைத்து விட்டால் போதும் அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவிலும் உங்களுடைய துன்பங்களும் துயரங்களும் தீர்க்க கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

துன்பங்கள் துயரங்கள் தீர

இந்த வழிபாடே விருட்ச வழிபாடு தான். சில குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் இருக்கும் விருட்சகங்களுக்கு இறை சக்தி அதிகம் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் ஒரு சில விருட்சகங்கள் சில தெய்வங்களுக்கு உகந்ததாக பார்க்கப்படுகிறது. துளசி பெருமாளுக்கு உகந்தது. வில்வம் சிவபெருமானுக்கு உகந்தது. வன்னி மரம் சிவபெருமான் முருகன் இருவருக்கும் உகந்தது.

அதே போல இந்த வழிப்பாடும் ஒரு விருட்சகத்தை வைத்து தான் செய்ய வேண்டும். அது வன்னி மற்றும் வில்வ மரம் தான். இந்த வன்னியும் வில்வமும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து பழமை வாய்ந்த ஆலயத்திலும் வன்னி மரம் கட்டாயமாக இருக்கும். அதே போல் வில்வ மரமும் இருக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நீங்கள் திங்கள்கிழமை என்று செய்ய வேண்டும். திங்கட்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள். அங்கு வன்னி மரம், வில்வமரம் இரண்டும் ஒன்றாக இருந்தால் மிகவும் விஷேசம். இல்லை என்றால் இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் பரவாயில்லை அவற்றின் முன் அமர்ந்து சிறிது நேரம் உங்களுடைய பிரச்சனைகளை மனதார சொல்லி வேண்டிய பிறகு 21 முறை மரத்தை வலம் வர வேண்டும்.

அதன் பிறகு சிவபெருமானை தரிசித்து அவரிடமும் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆலயத்தை வலம் வந்த பிறகு சிறிது நேரம் ஆலயத்தில் அமர்ந்திருந்து வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தீரும். அதுமட்டுமின்றி யாரிடம் சொல்ல முடியாமல் இதை எப்படி சரி செய்வது என்று மனதளவில் குழம்பிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் கூட தீர்ந்து போகும்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனை தீர ஆஞ்சநேயர் வழிபாடு

இந்த வழிபாட்டு முறையை சிவபெருமானை நினைத்து நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் விரைவில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உங்களுக்கும் நம்பிக்கை இருக்குமேயானால் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.`

- Advertisement -