கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களையும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகளையும் அடியோடு ஒழிக்கும் அற்புத விளக்கு! இந்த தீபத்தை எப்படி ஏற்றினால் பகை ஒழியும்?

narasimmar-vilakku-enemy
- Advertisement -

நம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை நாம் நம்முடைய சுய வலிமையால், சாமர்த்தியத்தால் எப்படியாவது வென்று காட்டி விடலாம். ஆனால் நம் கண்களுக்குத் தெரியாமல் நமக்கு செய்யும் அநியாயத்தை எதிர்த்து எப்படி போராட முடியும்? அதிலும் நம்முடனேயே இருந்து கொண்டு இனிக்க இனிக்கப் பேசி, நமக்கு பின்னால் குழி பறித்துக் கொண்டிருக்கும் துரோகிகளை எப்படி ஒழிப்பது? இந்த ஒரு தீபத்தை வீட்டில் இப்படி ஏற்றினால் எத்தகைய எதிரியையும் சுலபமாக வென்று விடலாம் என்கிறது சாஸ்திரம். அதை எப்படி ஏற்றுவது? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

enemy1

எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்று கூறுவதை கேட்டிருப்போம். உண்மைதாங்க! நான் உந்தன் எதிரி என்று கூறிக் கொண்டு நம் கண் முன்னே நமக்கு அநியாயம் இழைப்பவர்களை கூட நாம் மன்னித்து விடலாம். ஆனால் நான் உன் நண்பன் என்று கூறிக் கொண்டு எதிரி போல செயல்படுபவர்களை இனம் கண்டு கொண்டு விட்டால் அதன் பின் அவர்கள் நம்மை நெருங்காத படி நாம் செய்து விட வேண்டும். நாம் இருக்கும் திசைப் பக்கம் கூட அவர்கள் வரக்கூடாது.

- Advertisement -

இன்னும் சில எதிரிகள் நமக்கு மிகுந்த நெருக்கமானவர்களாக இருப்பார்கள். இப்படியான நமக்கு நெருக்கமானவர்களை நம்மால் வெறுத்து ஒதுக்கவும் முடியாமல், சேர்த்து வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் தருணங்களும் உண்டு. இப்படி நம்மை சுற்றி பல விதமான எதிரிகளும், துரோகிகளும், நண்பர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது? என்கிற சிந்தனையுடன் இருப்பது நம்முடைய வேலை அல்ல. நமக்கு அதை விட முக்கியமான காரியங்களும், பொறுப்புகளும் உண்டு.

enemy

எனவே இத்தகைய எதிரிகளை நம்மிடம் நெருங்க முடியாதபடி செய்து விட, அவர்களுடைய சூழ்ச்சிகள் பலிக்காமல் செய்து விட, அவர்களுடைய எண்ணங்கள் தோல்வியடைய செய்ய கூடிய சிறந்த பரிகாரம் தான் இது. கொடூர அரக்கன் இரண்யகசிபுவை கொன்ற நரசிம்மரை நினைத்து வழிபடக் கூடிய சிறந்த வழிபாடு தான் இது. எப்பொழுதும் எதிரிகளை ஒழிக்க நீல நிற திரிகளை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரம். நீல நிறத்திரி எல்லா நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். அந்த திரிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய எதிரிகளின் பெயர் தெரிந்தால் நரசிம்மரை நினைத்து அப்பெயரை மனதில் உச்சரிக்க வேண்டும். பின்னர் ஒரு சுத்தமான மண் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அகல் விளக்கிற்கு கீழே சிறிய அளவில் செம்பு அல்லது பித்தளை தட்டு ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் நீலநிற திரி இரண்டை எடுத்து திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும். எப்பொழுதும் தீபம் ஏற்ற இரண்டு திரிகளை திரிப்பது விசேஷமானது.

color-thiri

பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். சக்தி வாய்ந்த நரசிம்மர் உடைய இந்த மந்திரத்தை உச்சரித்து அகல் விளக்கு தீபம் ஏற்றி மனதார உங்கள் எதிரியின் பெயரை கூறி வழிபட்டு வந்தால் எத்தகைய எதிரிகளும் உங்களை விட்டு அழிந்து போவர். இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வரை செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளையும் நரசிம்மர் படத்திற்கு முன்பு இப்படி தீபம் ஏற்றி வைத்து 11 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். நாற்பத்தி எட்டு நாட்களில் உங்களுடைய எத்தகைய எதிரிகளும் உங்களுக்கு தொல்லை தராமல் அவர்களாகவே விலகி சென்று விடுவார்கள். இதனால் உங்களுக்கு ஆபத்து ஒன்றும் நேராது எனவே தாராளமாக இதனை மேற்கொள்ளலாம்.

Narasimmar

நரசிம்ம மந்திரம்:
ஓம் நரஸிம்மாய நமஹ!

- Advertisement -