எதிரிகள் மற்றும் துரோகிகள் தொல்லை நீங்க பரிகாரம்

ethiri throgi
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி நாம் நம்முடைய தொழிலிலோ, வேலையிலோ அல்லது குடும்ப பொருளாதாரத்திலோ முன்னேற்றத்தை சந்திக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு எதிரிகளும், துரோகிகளும் உருவாகிவிடுவார்கள். எதிரிகளையாவது ஒருவகையில் நாம் நம்பிவிடலாம். ஆனால் துரோகிகளை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.

உடன் இருந்து கொண்டே நமக்கு நன்மைகள் நடக்கக்கூடாது என்று பல காரியங்களை செய்பவர்களை தான் நாம் துரோகிகள் என்று கூறுகிறோம். அந்த வகையில் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தக்கூடிய எதிரிகளும் துரோகிகளும் நம்மை விட்டு விலகி அவர்களால் ஏற்பட்ட தீய செயல்கள் நம்மிடம் இருந்து அகல தேங்காயை வைத்து எப்படி எளிமையான முறையில் பரிகாரம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி போன்ற தினங்களில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு நல்ல தேங்காய் வேண்டும். அந்த தேங்காயில் இருக்கக்கூடிய மூன்று கண்களில் ஒரு கண்ணை மட்டும் உடைத்து தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் வெளியில் எடுத்து விட வேண்டும். பிறகு அந்த தேங்காய்க்குள் சிறிது வெண்கடுகு போடவேண்டும்.

அடுத்ததாக வெட்டிவேரை எரித்து அதன் பொடியை போட வேண்டும். மூன்றாவதாக மிளகை இடித்து அதன் பொடியை போட வேண்டும். இதே போல் கல்லுப்பையும் இடித்து அந்த பொடியையும் அதில் போட்டு தேங்காயை மூடி விட வேண்டும். பிறகு ஒரு சிவப்பு அல்லது கருப்பு துணியை எடுத்து அதில் இந்த தேங்காயை கட்டி பாதிக்கப்பட்டவர்களின் தலையை 27 முறை வலது புறமாக மட்டும் சுற்ற வேண்டும். பிறகு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதே போல் தொடர்ந்து 16 நாட்கள் செய்ய வேண்டும். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் இந்த ஒரு தேங்காயை வைத்து சுற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

17வது நாள் இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள் இந்த தேங்காயை எடுத்துக்கொண்டு மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்திக்கு சென்று உடைத்து விட்டு தூ என்று துப்பிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். வீட்டு வாசலில் வந்து வீட்டு வாசலில் முன்பாக இருக்கக்கூடிய மண்ணை எடுத்து சுடலை மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களை நினைத்தபடி நெற்றியில் வைத்துவிட்டு கையில் இருக்கும் மண்ணை ஊதி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும்.

இவ்வாறு வரும்பொழுது வெளியில் பாத்ரூம் இருந்தால் குளித்துவிட்டு வீட்டிற்குள் வரலாம். அப்படி வெளியில் பாத்ரூம் இல்லாத வீடுகளில் ஒரு பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்து அதில் கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு தயாராக வைத்திருக்க வேண்டும். அந்த தண்ணீரை தலையில் எடுத்து மூன்று முறை தெளித்துவிட்டு கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் வந்து குளித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் துரோகிகள் யார் என்பதையும் நமக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் தெரியப்படுத்தி விடுவார்.

இதையம் படிக்கலாமே: இழந்த பொருளை திரும்பப் பெற வழிபாடு

மிகவும் எளிமையான இந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரத்தை நாமும் செய்து நம்முடைய துரோகிகள் யார் எதிரிகள் யார் என்று தெரிந்து கொண்டு வாழ்க்கையின் முன்னேற்றத்தை மேம்படுத்த முடியும்.

- Advertisement -