எதிரிகளை ஒதுக்கி வைக்க பரிகாரம்

amman7
- Advertisement -

நம்மை சுற்றி சில பேர் இருப்பாங்க. வேலை செய்யும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், அக்கம் பக்கம் வீட்டிலும் சரி, நம்மை பற்றி அடுத்தவர்களிடம் தப்பு தப்பான வதந்திகளை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். எதிரிக்கு தேவை எல்லாம், ஒரே விஷயம் தான். எப்படியாவது நமக்கு கெட்ட பெயரை வாங்கி தர வேண்டும்.

இவனுடைய பெயரை எப்படியாவது டேமேஜ் செய்துவிட வேண்டும் என்று ரூம் போட்டு யோசிப்பாங்க.  நம்மால் இப்படிப்பட்ட எதிரிகள் வாயை மூடவே முடியாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் தப்பு தப்பாக, நம்மை போட்டுக் கொடுத்து, நம்ம மேல ஒரு பெரிய பிளாக் மார்க்கையே உண்டு பண்ணிடுவாங்க.

- Advertisement -

சில சொந்த பந்தங்களும் இப்படித்தான் இருப்பாங்க. நம்மை இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ விட மாட்டார்கள். இப்படி உங்களை சுற்றி ஒரு கூட்டமே திரிகிறதா. அந்த கூட்டத்தை உங்களை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா. எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

எதிரி தொல்லை நீங்க

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவையான பொருள். ஒரு சின்ன துண்டு கட்டி பெருங்காயம், கொஞ்சமாக வெண்கடுகு, 3 கிராம்பு, ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தொல்லை தரும் எதிரிகள் விலக வேண்டும் என்று எழுதி விடுங்கள். சில பல பேரின் பெயர்கள் உங்களுக்கு நல்லா தெரியும்னா அவர்களுடைய பெயரையும் அந்த பேப்பரில் எழுதி மடித்து வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

ஒரு கண்ணாடி டப்பா மூடி போட்டபடி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டப்பாவில் முதலில் ஒரு கட்டிப் பெருங்காயம், ஒரு ஸ்பூன் வெண்கடுகு போட்டு, கிராம்பையும் போட்டு, எழுதி வைத்திருக்கும் பேப்பரை அது உள்ளே போட்டு, மூடி ஒரு குலுக்க குழிக்கிடுங்க. இந்த பாட்டிலை உங்கள் கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு தொல்லை தரும் எதிரிகள் எல்லாம் உங்களை விட்டு தூரப் போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, இந்த பாட்டிலை பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

48 நாள் இந்த பாட்டில் அப்படியே இருக்கட்டும். தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த எதிரி என்னை விட்டு விலக வேண்டும் என்று குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து ஊதுவத்தி மட்டும் அந்த பாட்டிலுக்கு காண்பியுங்கள். 48 வது நாள் அந்த பாட்டிலுக்கு உள்ளே இருக்கும் பேப்பர் வெண்கடுகு பெருங்காயம் கிராம்பு எல்லாவற்றையும் வெளியில் எடுங்க.

- Advertisement -

ஒரு சின்ன கட்டி கற்பூரம் எடுங்க. ஒரு மண் அகல் விளக்கில் வைத்து அந்த கற்பூரத்தை ஏற்றி, இந்த பொருட்களை எல்லாம் அந்த நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள். அவ்வளவுதான். அந்த எதிரி உங்களை விட்டு தூர சென்று விடுவார்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரியின் உயிருக்கோ அல்லது அவர்களுடைய முன்னேற்றத்திற்கோ, அவர்கள் குடும்பத்திற்கும் எந்த ஆபத்தும் வராது. அந்த எதிரி உங்களைப் பற்றி சிந்திப்பதை மறந்து விடுவார்கள். அவ்வளவு தான்.

இந்த பரிகாரத்தை குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டில் செய்ய வேண்டும். அதாவது அந்த பாட்டிலை தயார் செய்து வைக்கக்கூடிய நேரம் ஆனது ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி அளவில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. சரியாக 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால் 9 மணிக்குள் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்குமோ அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வாராஹி மந்திரம்

48 வது நாள் இந்த பொருட்களை எல்லாம் நெருப்பில் போட்டு கொளுத்துகிறீர்கள் அல்லவா அப்போது உங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் தூங்கி இருக்க வேண்டும். வீட்டிற்கு வெளிப்பக்கத்தில், இரவு 9 மணிக்கு மேல் இந்த பொருளை எல்லாம் நெருப்பில் போட்டு பொசிக்கி விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள் 48 நாட்களில் எதிரியை தூரம் துரத்தி அடித்து விடலாம்.

- Advertisement -