வேண்டுதல் நிறைவேற வாராஹி மந்திரம்

varahi
- Advertisement -

இன்று தேய்பிறை பஞ்சமி திதி. உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டம், உங்களை விட்டு படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் அந்த கஷ்டம் காணாமல் போக வேண்டும் என்றால் வராகி தாயே இன்று மாலை வேண்டுதல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த பஞ்சமி திதியில், காரியசித்தி நேரம் என்று 1 மணி நேரம் இருக்கிறது.

அந்த நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து வாராகியை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்கள் கஷ்டம் அடுத்த பஞ்சமி திதி வருவதற்குள் காணாமல் போய்விடும். உதாரணத்திற்கு எனக்கு இருக்கும் கடன் சுமை தீர வேண்டும், நோய் நொடி சரியாக வேண்டும், வீட்டில் இருக்கும் வறுமை நீங்க வேண்டும், எதிரி தொல்லை விலக வேண்டும், எப்படி உங்களை விட்டு எந்த பிரச்சனை விலக வேண்டுமோ அந்த பிரச்சனைக்காக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வாராகியின் திருவுருவப்படம் இருந்தால் வாராகிக்கு சிவப்பு நிற பூக்களை வைக்கலாம். சிலை இருந்தால் அதற்கு உண்டான அபிஷேக ஆராதனைகளை முறையாக செய்து விடுங்கள். பிறகு வாராகி தாய்க்கு அலங்காரமும் செய்து கொள்ளுங்கள். வாராகிக்கு ஒரு நெய்வேதியம் கட்டாயம் வைக்க வேண்டும்.

அது கிழங்கு வகைகளாக இருக்கலாம், அல்லது மாதுளம் பழம் முத்துக்களாக இருக்கலாம், அல்லது வாழைப்பழமாக இருக்கலாம். அது உங்களுடைய விருப்பம். வாராகி உங்களுடைய தாய். அவளுக்கு ஏற்றபடி ஒரு நெய்வேத்தியம் பாசமாக செய்து வைத்து விடுங்கள். பிறகு பூஜை அறையில் அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை வாராகியை நினைத்து மனம் உருகி சொல்ல வேண்டும்.

- Advertisement -

காரிய சித்தி வாராஹி மந்திரம்

ஓம் ஐம் க்லௌம்
அதிசய கார்ய
சித்தி தாயை நமஹா

இதுதாங்க அந்த மந்திரம். இந்த மந்திரத்தை 1 மணி நேரம் முழுவதும் சொல்லலாம். மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. ஏதாவது ஒரு கோரிக்கையாக வாராஹித்தாயிடும் வையுங்கள். அதாவது உங்களுக்கு இருக்கக்கூடிய பல கஷ்டங்களில் ஏதாவது ஒரு கஷ்டத்தை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த கஷ்டங்களை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

சரி, இன்று பஞ்சமி திதியில் காரிய சித்தி நேரம் எப்போது வருகிறது. 28.4.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 முதல் 8:15 வரை காரியசித்தி நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் வாராஹி திருவுருவப்படமும் இல்லை சிலையும் இல்லை என்பவர்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம். நீங்கள் ஏற்றி இருக்கும் தீபச்சுடரை வாராஹி தாயாக நினைச்சுக்கோங்க.

கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக மட்டும்தான் இந்த வழிபாடா. நமக்கு தேவையான வரங்களை இன்று வாராகி தாயிடம் கேட்கக் கூடாதா என்று சில பேருக்கு சந்தேகம் வரலாம். வரங்கள் கேட்கலாம் தவறு கிடையாது. இருந்தாலும் இது தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் நம் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று இந்த நேரத்தில் பிரார்த்தனை வைப்பது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருள் கிடைக்க வழிபாடு

இது தவிர உங்களுக்கு வேறு ஏதாவது வரம் தேவை இருந்தாலும் அதை நீங்கள் இந்த நேரத்தில், இந்த மந்திரத்தை சொல்லி வாராகி தாயிடம் கேட்கும்போது, அந்த காரியம் சித்தி அடையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -