எதிரிகளை துவம்சம் செய்ய ஒரே ஒரு பொருள். ஒரே ஒரு பரிகாரம்.

amman2
- Advertisement -

வாழ்க்கை என்றாலே தினம் தினம் எதிரிகளோடு போராடி ஜெயிக்க வேண்டிய நிலைமை. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் தன்னிச்சையாக முயற்சிகளை மேற்கொண்டு, எதிரிகளிடம் போராடி, அதிலிருந்து விடுபட்டு, கெட்ட சக்திகளிடம் இருந்து விடுபட்டு, பொறாமை குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பித்து, கண்திருஷ்டியிலிருந்து தப்பித்து, முன்னேறி வருவது என்பது அத்தனை சுலபமான விஷயம் அல்ல.

நீங்களும் இதேபோல போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், உங்களுக்கு எதிரிகளால் பெரிய அளவில் பாதிப்பு வரக்கூடாது, எதிரிகளின் சூழ்ச்சியால் நீங்கள் வீழ்ச்சி அடையக் கூடாது, எதிரிகளை துவம்சம் செய்ய வேண்டும் என்றால், ஆன்மீகம் ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். இதோ இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எதிரிகளை வீழ்த்த ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நாம் வழிபட போகும் தெய்வம் அம்பாள் அம்மன். ஏதாவது ஒரு கோவக்கார அம்மனை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, காளி, பிரத்தியங்கரா, வாராஹி இப்படி யாராவது ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முக்கியமான விஷயத்துக்காக நாளைக்கு நீங்க வெளியே போக போறீங்க.

பெரிய மீட்டிங், பெரிய காண்ட்ராக்ட் உங்கள் பக்கம் சாதகமாக வர வேண்டும், அல்லது பெரிய கோர்ட்டு கேஸ் வழக்கு இப்படி ஏதோ ஒரு முக்கியமான விஷயம் எதிரிகளோடு போட்டி போட்டு ஜெயித்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது என்றால், நீங்கள் காலையில் எழுந்து ஒரு அம்பாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

கையில் ஒரே ஒரு விரலி மஞ்சள், மஞ்சள் நூல் போட்டு கட்டி எடுத்துச் செல்லுங்கள். அதை அம்பாளியின் பாதங்களில் வைத்து எடுத்து தரச் சொல்லுங்கள். மெல்லிசாக இருக்கும் நூலை அந்த மஞ்சளில் கட்டி மூன்று முடிச்சு போட்டால் போதும். சின்ன நூல் போதும்.

அம்பாளை மனதார வழிபாடு செய்து விட்டு அந்த மஞ்சளை உங்களுடைய பாக்கெட் பர்ஸ் ஹேண்ட் பேக் எதில் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த அம்பாளை நினைத்து அந்த மஞ்சளை எடுத்துக்கொண்டு முக்கியமான விஷயத்திற்கு நீங்கள் சென்றால், அந்த விஷயத்தில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

எதிரிகள் போட்டி பொறாமையில் உங்களை வீழ்த்த எந்த சூழ்ச்சி செய்தாலும் அது நடக்காது. சில பேருக்கு எதிரிகளால் பெரிய அளவில் உயிருக்கே ஆபத்து வரும். செய்வினை கூட வைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் போது இந்த ஒரு மஞ்சள் உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரத்திலும் நல்லதே நடக்க இந்த 2 பொருளை கையில் வச்சுக்கோங்க.

எளிமையான பரிகாரம் தான். ஆண்களும் இதை செய்யலாம். பெண்களும் இதை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -