கெட்ட நேரத்திலும் நல்லதே நடக்க இந்த 2 பொருளை கையில் வச்சுக்கோங்க.

pillaiyar2
- Advertisement -

கெட்ட நேரம் நமக்கு ஆரம்பிக்குது என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அல்லது சில பேர் ஜாதகம் பார்த்து நமக்கு கெட்ட நேரம் ஆரம்பிக்குது என்று தெரிந்து கொள்வார்கள். அடுத்த மூன்று மாதத்திற்கு உங்களுக்கு நேரம் சரியில்லை அல்லது அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு நேரம் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த கெட்ட நேரத்தில் இருந்து தப்பிக்க நிறைய காசு செலவு இல்லாமல் சுலபமாக நமக்கு நாமே ஏதாவது பரிகாரம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்பவர்களுக்காக ஆன்மீகம் சார்ந்த பதிவு இது. உங்களுக்கு கெட்ட நேரம் நடக்கும்போதும் கூட, வரக்கூடிய பிரச்சனைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க இந்த பரிகாரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

பெரியவர்கள் சொல்வார்கள் அல்லவா. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று. அப்படி நீங்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வாங்க நம்முடைய கெட்ட நேரத்தில், நமக்கு உதவி செய்யும் அந்த இரண்டு பரிகாரங்கள் என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

கெட்ட நேரத்திலும் நல்லது நடக்க பரிகாரம்

முதல் பரிகாரமாக நீங்கள் செய்ய வேண்டியது அரச மரத்தை சுற்றிவர வேண்டும். எந்த கிழமையில் எப்படி சுத்தணும்? சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். காலையில் 6 மணிக்கு அரச மரத்தை சுற்ற தொடங்குங்கள். 108 முறை அந்த அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்து விட்டு அரச மரத்திலிருந்து ஒரு இலையை பறித்து எப்போதும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்த வாரம் சனிக்கிழமை அரச மரத்தை சுற்றி இன்னொரு இலையை எடுக்கும் வரை இந்த இலை உங்கள் கையில் இருக்கட்டும். பழைய அரச இலையை மரத்தடியில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய அரச இலையை அடுத்த வாரம் சனிக்கிழமை 108 முறை சுற்றிவிட்டு எடுத்துக் கொள்ளவும். இது ஒரு பரிகாரம். வாரம் தோறும் சனிக்கிழமை இதை நீங்கள் செய்து வந்தாலே பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். இரண்டாவதாக ஒரு பரிகாரம்.

அருகம்புல் பரிகாரம்

விநாயகருக்கு திங்கட்கிழமை தோறும் அருகம்புல்லை கொடுத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர் பாதங்களில் வைத்த அருகம்புல்லிலிருந்து இரண்டு அருகம்புல்லை கொண்டு வந்து நீங்கள் கையில் வைத்துக் கொள்ளணும். உங்கள் கையில் பாதுகாப்பாக இப்ப இரண்டு பொருள் இருக்கு. அரச மரத்து இலை, அருகம்புல்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களை கையில் வைத்துக் கொண்டாலே உங்களுக்கு பிரச்சனைகள் இருக்காது. கெட்ட நேரத்தில் கூட கெடுதல் நடக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அருகம்புல்லும் அப்படித்தான். இந்த திங்கட்கிழமை வழிபாடு செய்துவிட்டு, அடுத்த திங்கட்கிழமை வழிபாடு செய்யும் வரை பழைய அருகம்புல்லை கையில் வைத்துக் கொள்ளவும்.

புது அருகம்புல் வந்தவுடன் பழைய அருகம்புல்லை கால் படாத இடத்தில் போட்டு விடவும். இந்த இரண்டு பரிகாரங்களையும் உங்களுக்கு கெட்ட நேரம் நடக்கும் வரை தொடர்ந்து செய்யலாம். அது 1 வருடம், 3 வருடம் எத்தனை வருடமானாலும் சரி தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

சில பேருக்கு கெட்ட சகுனத்தின் போது மனசு கஷ்டப்படும். திடீரென்று வீட்டில் மாட்டி வைத்திருந்த போட்டோ கீழே விழுந்து உடையும். கண்ணாடி கீழே விழுந்து உடையும். உப்பு ஜாடி உடைந்துவிடும். குங்குமம் கொட்டிவிடும். இப்படிப்பட்ட அபசகுனமான சங்கடமான தரும் விஷயங்கள் நடந்தால் கூட அதில் நமக்கு மனது கொஞ்சம் நெருடலாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஏழேழு ஜென்மத்துக்கும் பணப்பிரச்சனை வராமல் இருக்க ஏழு பன்னீர் ரோஜா போதும்.

இதனால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று கூட ஒரு வாரம் நீங்கள் சனிக்கிழமை அரச மரத்தை சுற்றலாம். ஒரு வாரம் திங்கட்கிழமை பிள்ளையாரை பார்க்கலாம். மேல் சொன்ன வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -