உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளின் முன் விழாமல் எதிர்த்து நிற்க மூன்று எருக்கம் இலையை வைத்து இப்படி செய்து விடுங்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்

ethiri thollai neenga
- Advertisement -

எதிரிகள் இல்லாத வாழ்க்கை எந்திரத்தனமான வாழ்க்கை என்றே சொல்லலாம் ஒருவருடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முன்னோக்கி செல்கிறதோ அந்த அளவிற்கு எதிரிகளும் இருப்பார்கள். ஆனால் அந்த எதிரிகள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். நாம் முடிந்த வரையில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அதில் எப்படி வெற்றி பெறுவது என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர, எதிரிகளே இருக்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம் கிடையாது.

இன்றைய காலக்கட்டமும் அப்படித் தான் உள்ளது. ஒருவர் நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டு இருந்தால் அவர்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற வக்கிர மனம் கொண்ட மனிதர்கள் பெருகி விட்டார்கள். இவர்களுக்கிடையே தான் நாம் தினமும் போராடி வெற்றி பெற வேண்டி உள்ளது. இதற்காக நாமும் அவர்கள் வழியில் தான் செல்ல வேண்டும் என்பது கிடையாது. அவர்கள் நம் வழியில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டும். அதற்கான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரிகளை வீழ்த்த எருக்கம் இலை பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு மூன்று எருக்கம் இலை, மூன்று விரலி மஞ்சள், கொஞ்சம் கற்பூரம் தேவை. அதே போல் இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்போது இது போல தொல்லைகள் அதிகமாக உள்ளது என நினைக்கிறீர்களோ அந்த நாளிலே செய்து விடலாம். ஏதாவது ஒரு பொதுவான நாளில் செய்ய வேண்டும் எனில் ஞாயிற்றுக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் செய்யக் கூடாது. வீட்டிற்கு வெளியில் தான் செய்ய வேண்டும். இது உங்கள் வீட்டில் வாசலுக்கு வெளியே இடம் இருந்தால் அங்கு செய்து கொள்ளுங்கள் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் செய்து கொள்ளலாம். முதலில் இந்த எருக்கம் இலைகளை கையில் எடுத்து உங்கள் தலையை சுற்றி நான்கு சுற்றி ஆன்டி கிளாக் வைசில் சுற்ற வேண்டும். அதன் பிறகு பிளாக் வயசில் நான்கு முறை சுற்ற வேண்டும். எதிரிகள் யார் எனத் தெரிந்தால் அவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டே சுற்றலாம் இன்னுமே கூட பலன் அதிகம்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு தட்டில் நீங்கள் சுற்றிய இலைகளை வைத்து அதன் மேல் இந்த கிழங்கு மஞ்சள் வைத்து கற்பூரத்தை அதன் மேல் வைத்து எரித்து விடுங்கள். மஞ்சள் இலை இவை அனைத்துமே முழுவதுமாக எரிந்து விடாது. ஓரளவிற்கு கருத்து நிறம் மாறும். அதன் பிறகு இதையெல்லாம் ஒரு கவரில் எடுத்து போட்டு யாரும் கால் படாத இடத்தில் தூக்கி தூரப் போட்டு விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் வீட்டிற்குள் வந்து குளித்து முடித்து பூஜை அறையில் உங்கள் எதிரி தொல்லைகள் முற்றிலுமாக நீங்க வேண்டும் என்ற வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரிகளுக்கு உங்களை வீழ்த்த வேண்டும் என்று எண்ணம் அவர்களுக்கு வராது என்று சொல்லப்படுகிறது. இதனால் உங்களுடைய எந்த வளர்ச்சியிலும் முட்டுக்கட்டையாக வர மாட்டார்கள். இந்த பரிகாரத்தை செய்யும் வேளையில் விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

எதிரிகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள இந்த எளிய தாந்த்ரீக பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -