யாரிடமும் நீங்கள் ஏமாறாமல் இருக்க இந்த திலகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

amman lady
- Advertisement -

ஒரு மனிதனுக்கு ஏமாற்றம் என்பது மிகப்பெரிய மன உளைச்சலை தரக்கூடியது. இது ஒருவரின் வாழ்க்கையில் பல வகைகளில் வரும். நாம் ஏதாவது ஒரு பணியை செய்ய நினைத்திருப்போம் அதை செய்ய முடியாது. ஏதாவது ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம் அது நமக்கு கிடைக்காது அல்லது நடக்காது. இவையெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியது தான்.

இந்த ஏமாற்றத்திலேயே கொடுமையானது என்னவென்றால் நாம் நம்பியவரே நம்மை ஏமாற்றுவது தான். அது தொழில் கூட்டாளியாக இருக்கலாம். நண்பர்களாக அல்லது உறவுகளாக இருக்கலாம். இப்படி எதுவாக இருப்பினும் அவர்களை நாம் முழுமையாக நம்பும் பட்சத்தில் அவர்களுடைய இந்த செயல் நிச்சயம் நமக்கு பெரும் ஏமாற்றத்தை தரும்.

- Advertisement -

இது போல ஏமாற்றங்களை பலரும் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை பட்டால் மறுபடியும் இது போல ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் இது தொடர்கதையாக தான் இருக்கும். இது அவர்களுடைய செயலால் இருந்தாலும் கூட அவர்களுக்கான கிரக பலனே இப்படி பலரிடம் ஏமாறுவதாகவே இருக்கும்.

இதை சரி செய்வதற்கான முறையை கூட நமக்கு ஆன்மீகம் தந்திருக்கிறது. அது எளிமையான ஒரு திலக வைக்கும் சூட்சம பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும் போது பிறரிடம் ஏமாறாமல் இருப்பதுடன் நமக்கு தைரியத்தை தருவதாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

யாரிடமும் ஏமாறாமல் இருக்க

இது நெற்றியில் திலகத்தை வைக்கும் ஒரு முறை தான். இதற்கென பெரிய செலவுகள் ஒன்றும் கிடையாது. வழிபாடு முறைகள் போன்ற எதுவும் கிடையாது. இதற்கு நீங்கள் கடையில் வாங்க வேண்டிய ஒரே ஒரு பொருள் ஜவ்வாது பேஸ்ட். இது அனைத்து நாட்டு மருந்து கடைகள் அல்லது தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கும். இப்போது ஆன்லைன்களிலும் விற்பனையாகிறது இதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த ஜவ்வாது பேஸ்ட்டை பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் வெளியில் செல்லும் போதும் இந்த பேஸ்ட்டை கொஞ்சமாக உங்கள் நெற்றியில் வைத்து விட்டு அதன் மேல் குங்குமத்தை வைக்க வேண்டும். இந்த குங்குமத்தை வைக்கும் போது உங்களுக்கு பிடித்த பெண் தெய்வம் அது இஷ்ட தெய்வமாக இருக்கலாம் அல்லது குலதெய்வமாக இருக்கலாம். யாராக இருப்பினும் அவர்களே உங்கள் நெற்றியில் திலகத்தை சூட்டுவதாக மனதுக்குள் பாவனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இது உங்களுக்கு ஒரு தைரியத்தை கொடுப்பதுடன் உங்கள் தெய்வம் உங்களுடனே வருப்பது போன்ற நம்பிக்கையும் கொடுக்கும். அது மட்டுமின்றி இந்த திலகத்தை நெற்றியில் சூடும் போது பிறர் உங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் உங்களை அணுகாமல் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: இந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

இந்த திலகத்தை சூடி கொள்வதுடன் நீங்களும் கொஞ்சம் சமயோசிதமாக சிந்தித்து யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று தெரிந்து பேசி பழகுவதும் முக்கியம். இந்த திலகமும் அப்படியான சிந்தனைக்கு நிச்சயம் வழிவகுக்கும். இதில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -