இந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

aiswarya deepam
- Advertisement -

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வழிபாடு ஆகும். அந்த வழிபாட்டில் மிகவும் முக்கியமாக இருக்கக்கூடியது தான் தீபம் ஏற்றுதல். எந்த வீட்டில் தீபம் காலையிலும் மாலையிலும் ஏற்றப்படுகிறது அந்த வீடு மிகவும் ஒளிமயமாகவும், பிரகாசமாகவும், தெய்வ கடாட்சம் நிறைந்ததாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே தீபம் ஏற்றி வழிபடுவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய இருள் என்னும் துன்பம் அகன்று மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தீபம் ஏற்றி வழிபடும் இல்லத்தில் தீய சக்திகளின் ஆதிக்கம் குறைய ஆரம்பித்து தெய்வ சக்தியின் அருள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

தினமும் தீபம் ஏற்றி வழிபட முடியாதவர்கள் கூட செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபாட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. தீபம் ஏற்றும் எண்ணெய்களை பொறுத்து பலன்கள் உண்டாகும். அதில் கடலை எண்ணெயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்கை பொருத்தும் பலன்கள் இருக்கும். இதில் இரும்பு விளக்கை தவிர்த்து மற்ற பிற விளக்குகளை ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்று கூறப்படுகிறது. இரும்பு விளக்கு கோவில்களில் ஏற்ற வேண்டும் என்றும் அது சனி பகவானுக்குரிய உலோகம் என்பதால் வீட்டில் ஏற்றக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக திரியில் தான் மிகவும் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. திரி எந்த நிறத்தில் ஏற்றுகிறோமோ அந்த நிறத்திற்கு ஏற்றார் போல் அந்தந்த நிறத்திற்குரிய கிரகங்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய நிறத்தை பயன்படுத்தி திரியை போட்டு தீபம் ஏற்றினால் அந்த கிரகத்திற்குரிய பாதிப்புகள் நமக்கு குறையும் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக நம் வீட்டில் பஞ்சுத்திரியை பயன்படுத்துவோம். பஞ்சுத் திரியை இன்னும் சக்தி மிகுந்த திரியாக மாற்றி உபயோகப்படுத்தினால் அதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். சுத்தமான பன்னீரில் சந்தனத்தை கரைத்து அதில் நாம் உபயோகப்படுத்தும் பஞ்சுத்திரியை போட்டு நன்றாக நனைத்து பிறகு அதை உலர்த்தி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த திரியை பயன்படுத்தி வீட்டில் ஒரே ஒரு விளக்காவது நாம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அப்படி ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெருமாளின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இப்படி அதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதையும் படிக்கலாமே: நவகிரகங்களின் அருளை பெற உதவும் பரிகாரம்

ஒருமுறை ஏற்றிவிட்டு இத்தனை பலன்களையும் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறான ஒன்று. தொடர்ந்து நம்பிக்கையுடன் இந்த திரியை பயன்படுத்தி வீட்டில் தீபம் ஏற்றி பாருங்கள். மேற்சொன்ன அனைத்து பலன்களும் படிப்படியாக உங்களை வந்து சேரும்.

- Advertisement -