பரம எதிரியை கூட நண்பர்களாக மாற்றக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த மந்திரம். கெட்டது செய்ய வேண்டும் என்று உங்கள் முன்னே யாராலும் நிற்கவே முடியாது.

enemey
- Advertisement -

மனிதனாக பிறந்து விட்டால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு எதிர்ப்புகள் இருந்துகொண்டே தான் இருக்கும். அப்படி எதிர்ப்புகளை உண்டாக்கக்கூடிய ஒவ்வொரு ஜீவராசிகளும், ஒவ்வொரு உயிரினங்களும் எதிரியின் வரிசையில்தான் சேர்க்கப்படும். நான் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். மனிதர்கள் மட்டும் தான் நமக்கு எதிரி என்று. ஆனால், இருசக்கர வாகனத்தில் அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ நாம் செல்லும் போது குறுக்கே ஒரு நாய் வந்து நம்மை கீழே விழச் செய்து விட்டால் கூட, அந்த நாய் நம்முடைய எதிரி தானே

அலுவலகத்தில் நாம் வேலை செய்பவர்களாக இருந்தால் நமக்கு முன்னேற்றம் கிடைக்கக்கூடாது என்று, நமக்கு முன்னால் வேலை செய்பவர்கள் நிச்சயமாக நினைப்பார்கள். இவர்களும் நம்முடைய எதிரி பட்டியலில் சேர்க்கப் படுபவர்கள். ஒரே போஸ்டிங்கில் நண்பர்கள் 2 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் பிரமோஷன் கிடைத்து விட்டாலே பிரச்சனைதான். மற்றொருவருக்கு பொறாமை வந்துவிடும். எதிரியாக மாறி விடுவான். நம் உடன் பிறந்தவர்கள் நம் சொந்த பந்தங்கள் எல்லோருமே நம்முடன் நல்ல உறவோடு தான் இருப்பார்கள். அதுவே நமக்கு எதிர்பாராமல் ஒரு ஜாக்பாட் அடித்து ஒரு கோடி ரூபாய் கிடைத்துவிட்டால், எல்லா உறவும் எதிரியாக மாறிவிடும்.

- Advertisement -

இப்படி நம்மை சுற்றி ஏதோ ஒரு ரூபத்தில் எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. எல்லா எதிர்ப்புகளையும் கடந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அதேசமயம் எதிரிகளே இல்லாத வாழ்க்கையும் உப்பு சப்பு இல்லாமல் தான் இருக்கும். எதிரிகளை எதிர்த்து போராடி ஜெயிக்கும் போது தான் நம்முடைய வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். சரி அதேசமயம் எதிரிகளால் நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. அதிலும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும் அல்லவா. அதற்கு ஆன்மீக ரீதியாக ஒரு சிறிய மந்திரம் இதோ உங்களுக்காக.

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றால் உங்களுக்கு எதிராக நிற்கும் எந்த கெட்ட சக்தியும் செயலிழந்துவிடும் என்பது நம்பிக்கை. எதிரி தொல்லையில் இருந்து விடுபட சொல்ல வேண்டிய மந்திரம்.

- Advertisement -

ஓம் பூர்வகபிமுகாய பஞ்சமுக ஹனுமதே டம் டம் டம் டம் டம்
சகல ஸத்ரு நிவாராணாய ஸ்வாஹா

எதிரிகளும் உங்களுடைய நண்பராக மாறுவார்கள். ஒருவேளை ரொம்பவும் பெரிய எதிரியாக இருந்து, நீங்கள் முன்னேற கூடாது என்று உங்களுக்கு ஏவல் பில்லி சூனியத்தை ஏவி விட்டாலும் சரி, அந்த எதிர்மறை ஆற்றல் உங்களை நெருங்கவே முடியாது. உங்களுடைய சந்தோஷம் கெட்டுப்போகாமல் இருக்க எதிரி தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தாலே போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -