எதிரியை வசியம் செய்ய ஒரு வரி மந்திரம்

enemy
- Advertisement -

நம் வேலை செய்யக்கூடிய இடம், வியாபாரம் செய்யக்கூடிய இடம், தொழில் செய்யக்கூடிய இடம், என்று எல்லா இடத்திலும் நம்மை பிடிக்காதவங்களும் இருப்பாங்க. நமக்கு பிடிக்காதவர்களும் இருப்பாங்க. இப்படிப்பட்டவர்களை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நமக்கு அவர்கள் எந்த கெடுதலையும் செய்திருக்க மாட்டார்கள்.

நாமும் அவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்திருக்க மாட்டோம். ஆனால் சூழ்நிலை காரணமாக சின்ன சின்ன சண்டைகளின் மூலம் எதிரியாக மாறியிருப்போம். சில பேருக்கு நண்பர்கள் எதிரியாளாக இருப்பார்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் எதிரிகளாக மாறுவார்கள். நம்முடைய எதிரிகளை வசியம் செய்ய ஏதாவது ஒரு வழி இருக்குதா, என்று கேட்பவர்களுக்காக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு.

- Advertisement -

எதிரி வசியம் என்றதும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லிவிட்டால் அந்த தனிப்பட்ட ஒரு நபர் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொள்வார்கள் என்று அர்த்தம் கிடையாது. இது தனி நபர் வசியம் கிடையாது. அடுத்தவர்களை தலையாட்டி பொம்மை போல, நம்முடைய பேச்சை கேட்க வைக்கும் வசியமும் கிடையாது.

நம்முடைய எதிரிகள், நம்மை எதிரியாக பார்ப்பவர்களை, நம்முடைய நண்பர்களாக மாற்றிக் கொள்ளப் போகும் சூட்சம வித்தை. எளிதான வார்த்தையில் சொல்லப்போனால், ஜன வசியம் என்று சொல்லலாம். நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மை பார்த்தால் பிடிக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வருவதன் மூலம், நம் மேல் இருக்கும் கோபதாபங்களை, நம்முடைய எதிரிகள் மறந்து விடுவார்கள்.

- Advertisement -

நம்முடன் நட்புறவோடு பழகுவார்கள். அவ்வளவு தான். அதற்கான மந்திர வார்த்தை என்ன. அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிய விரிவான தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

எதிரியை நண்பர்களாக மாற்றும் மந்திரம்

- Advertisement -

இதற்கு நமக்கு ஒரு டம்ளர் நிரம்ப குடிக்கின்ற தண்ணீர் தேவை. சமணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்னால் இந்த டம்ளர் தண்ணீரை வைத்து விடுங்கள். ‘சர்வ ஜன வசிய வசிய ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு, அந்த டம்ளர் தண்ணீரை குடித்து விட வேண்டும். தினமும் நீங்கள் இதை செய்யலாம். தவறு கிடையாது.

108 முறை மந்திரத்தை சொல்ல நேரமில்லை என்பவர்கள், வெறும் 27 முறை மட்டும் உச்சரித்தாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை சொல்லி உங்கள் முன்னே இருக்கும் தண்ணீரை எடுத்து குடித்து விட்டீர்கள் என்றால் உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் எல்லாம் உங்களை நண்பர்களாக பார்க்க தொடங்கி விடுவார்கள்.

கருத்து வேறுபாடுடன் நம்முடன் பழகி, வாக்கு வாதம் செய்து சண்டை போட்டவர்கள் கூட, நம்மைப் பற்றி புரிந்து கொண்டு நம்முடன் நட்புறவு பழகுவார்கள். 48 நாட்களுக்குள் இது நிச்சயம் நடக்கும். முயற்சி செய்து பாருங்கள். இந்த உலகத்தில் நாம் வாழப்போவது சிறிது காலம் தான். சண்டை எல்லாம் வேண்டாம் சமாதானமாக வாழ்ந்தாலே போதும் என்பவர்களுக்கு இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பதிவு நிச்சயம் பயன்படும்.

- Advertisement -